வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. பரபர சூழலில் துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5ஆம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெறும் திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டமானது காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாபற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும், இதில் கலைஞர் நூற்றாண்டு விழா மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் 21ஆம் தேதி, மற்றும் மே 14ஆம் தேதி ஆகிய நாட்களில் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் திமுக மா.செக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்மையில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயபாலன் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மா.செக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications