திமுக மாவட்ட கழக தேர்தல் அறிவிப்பு.. 72 கழக மாவட்டங்கள்.. வேட்பு மனு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை : திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்குவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
72 மாவட்ட கழகங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 1000 செலுத்தி வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதி தொடங்குகிறது.
செப்.22-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான பெரும்பாலான இடங்களுக்கான தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறையை சமீபத்தில் திமுக தலைமை வெளியிட்டது. அதன்படி தேர்தல் நடைபெற்றது.

சுமூகமாக
தேர்தல் ஆணைய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள்
அடுத்ததாக மாவட்ட கழகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆகிய தவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதி தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இட இதுக்கீடு விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 25,000
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் 15வது கழக பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிற பின்வரும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், 3 மாவட்ட துணை செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பு மனு படிவம் ரூ.1000. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக
திமுக மாவட்ட கழக தேர்தலுக்காக செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. 72 கழக மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் தேதியையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications