"தமிழ்நாடு தலைகுனியாது" பிப்ரவரி முழுவதும் பிரச்சாரம் செய்யும் திமுக.. ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 234 நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதியாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்பட்ட சூழலில், பின்னர் திருப்பூரில் திமுக மகளிர் அணி மண்டல மாநாடு நடத்தப்பட்டது. நேற்று தஞ்சாவூரில் மகளிர் அணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து திமுக அடுத்தக்கட்ட பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் திமுக பிரச்சாரக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும், ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிப்ரவரி 1 முதல் 28 வரை ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரக் கூட்டம் நடத்த வேண்டிய இடம் மற்றும் கலந்து கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்களின் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி சிவா, ஜெகத்ரட்சகன், எழியன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன், கோவி செழியன், தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்எம் அப்துல்லா, மனோஜ் பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!











Click it and Unblock the Notifications