நம்பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்
Recommended Video
சென்னை: சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பதை எதிர்கொண்ட பிறகு தெரிந்து கொள்ளுங்கள் என அக்கட்சியின் பொருளாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்னைகள் குறித்து பேசப்போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது என மறுத்துவிட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பின்னர் சட்டசபை அலுவல்கள் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும். என்றைக்கு எந்த துறையின் மீது மானிய கோரிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின..
இந்நிலையில் அலுவல் ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் அலுவல் ஆய்வு கூட்டத்தின் உள்ளே பேசியதை வெளியே சொல்லக்கூடாது அதுதான் மரபு என்றார்.
அப்போது எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி தேர்தலுக்கு முன்பே அகற்றப்டும் என்றாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், அதெல்லாம் பொறுத்திருந்து பாருங்கள். பத்திரிகைகளிடம் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை விளக்கமாக சொல்லிவிட்டு செய்கிற விஷயமா இது? அதெல்லாம் என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம் என்றார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம் என்றார். சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்னைகள் குறித்து பேசப்போகிறோம் என்பதை இப்போதே சொல்ல மாட்டோம் என்று கூறிய துரைமுருகன், அப்படிச்சொன்னால் அவர்கள் தயாராகிவிடுவார்கள் சட்டமன்ற கூட்டம் வரும் ஜுலை 30 வரை நடைபெறுகிறது என்றார்.