என்னாது.. செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சரா.. அப்ப துரைமுருகன்.. பரபரக்கும் திமுக!
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்பார் என திமுக நிர்வாகிகள் உறுதி அளிக்கின்றனர்.
கரூர்: இப்போதான் ஓட்டு கேட்டு கொண்டு வருகிறார்.. அதற்குள் செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராவார் என்று திமுக நிர்வாகிகள் பேசிவருவது அரவக்குறிச்சி அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 தொகுதி இடைத்தேர்லில் மிக முக்கியமானது அரவக்குறிச்சிதான். இதற்கு காரணம் செந்தில்பாலாஜிதான். எப்படியாவது இவரை தோற்கடிக்க அதிமுக தரப்பில் பல வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 பேர் கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட குழு இந்த அரவக்குறிச்சி வெற்றிக்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை தவிர செந்தில் பாலாஜி தொகுதிக்குள் பணத்தை வாரி இறைத்தால் கையும் களவுமாக பிடிக்கவும், அதை வைத்து இந்த தொகுதியில் இடைத் தேர்தலை நிறுத்தவும் பிளான் உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன!
தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்!
அனைவருக்கும் வீடு
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் செந்தில் பாலாஜி கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். நான்கு பேர் நின்றிருந்தால்கூட அவர்களிடம் சென்று, நீண்ட நேரம் நின்று தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசுகிறாராம். எல்லாருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று பெரிய பெரிய வாக்குறுதிகளை அசால்ட்டாக தந்துவிட்டு போகிறாராம்.
சின்னசாமி
அவரை ஆதரித்து மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி நேற்று பேசினார். அப்போது, "அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அப்பொழுது செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பார்" என்றார்.
கிளம்பும் பீதி
இன்னும் தேர்தலே முடியல.. ரிசல்ட்டும் வரலை.. ஆட்சியும் 2 வருஷத்துக்கு உள்ளது.. இதில் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று திமுகவினர் சொல்லி வருவது அதிமுகவுக்குள் பீதியை ஏற்படுத்தி உள்ளதாம்!
முக ஸ்டாலின்
ஏனெனில் 4 தொகுதிகளில் அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற போவது செந்தில்பாலாஜிதான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஒருவேளை அப்படி ஒருநிகழ்வு நடந்தால், கண்டிப்பாக ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்கிறார்களாம் திமுக நிர்வாகிகள்!
சரி பொதுப்பணித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின்னா.. அப்ப துரைமுருகன்.. ஆஹா.. இப்பவே கண்ணைக் கட்டிட்டு வருதேய்யா!!