60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசு வாங்கிய கடனை ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டு கால திமுக அரசின் ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dmk-government-has-borrowed-more-debt-in-five-years-than-tamil-nadu-accumulated-over-60-years-says

புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் 2026-2027 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் தான் பட்ஜெட்டுக்கு முன்பாக தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது? கடன் எவ்வளவு? அதற்கான வட்டி எவ்வளவு? வருவாய் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: '' தமிழ்நாட்டில் 2020-21 ம் நிதி ஆண்டு வரை மொத்தம் கடன் ரூ.5.13 லட்சம் கோடியாகும். இது 2025-26 முதல் நிலை கணக்குகள் வரை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை சேர்த்தால் தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேபோல் 2021-26 வரை 5 ஆண்டு காலக்கட்டத்தில் (திமுக அரசில் முதல்வராக முக ஸ்டாலின் இருந்த காலம்)ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த ஐந்தாண்டு கால கடனானது மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்தில் திரட்டிய கடனை விட அதிகமாகும். மூதலன செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக உள்ளது. ஆனால் கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக இருக்கிறது. முதலீடு செல்வதற்காக அல்லாமல் அன்றாட செலவுகளுக்காக கடன் பெறுவதை இது குறிக்கிறது

தமிழகத்தில் ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் உள்ளது. இது கடந்த 2020-21ம் நிதியாண்டில் தனி நபர் மீதான கடன் ரூ.67,087 ஆக இருந்த நிலையில் தற்போது இருமடங்காக அதிகரித்துள்து. இணை மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிராவில், கர்நாடகாவில் தனி நபர் மீதான கடன் மிக குறைந்த அளவில் உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் பிறகஅகம் ஒரு குழந்தையின் மீதான கடன் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவை ஒப்பிடும்போதும் அதிகமாக உள்ளது. கடந்த ஆட்சியில் தனி நபர் கடன் 92 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த கடனுக்கு அரசு சார்பில் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவீனத்தின் சதவீதம் 22.8 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு அரசு சார்பில் ரூ.67,000 கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+