திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கம்- செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக சட்டதிட்ட விதி-6, பிரிவு 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை (NR) கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும் முறைப்படுத்துவதற்கும் கழக சட்டதிட்ட விதி 31-பிரிவு 20-ன் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது,
இந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, இணைச் செயலாளராக டாக்டர் செந்தில்குமார் எம்.பி, புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications