40/40 திமுக வெல்ல பணியாற்றுவேன்... கே.எஸ். அழகிரிக்கு வாழ்த்து சொன்ன மு.க. ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர், செயல் தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பணியாற்றுவேன்"
என்று அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியை வரவேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அவர் மென்மேலும் சிறப்புடன் பணிபுரிய வேண்டுமென வாழ்த்தி, அவருடன் இணைந்து பணியாற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. எச்.வசந்த்குமார், எம்.எல்.ஏ., திரு.கே.ஜெயக்குமார், திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத், திரு.மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.