தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்!
3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு இருப்பதற்கு எதிராக திமுக கட்சி ராஜதந்திரமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு இருப்பதற்கு எதிராக திமுக கட்சி ராஜதந்திரமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எந்த சட்டத்தை வைத்து யார் ஆக்சனில்
இறங்குவார்கள் என்று கணிக்க முடியாது. அந்த வகையில் தற்போது திமுகவின் வழக்கறிஞர் குழு கொடுத்த ஆலோசனை ஒன்று அந்த கட்சிக்கு பெரிய பலன் அளித்துள்ளது.
அமமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு வருகிறது. தேர்தல் முடிவை பொறுத்து இவர்களுக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

தகுதி நீக்கம்
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக தலைவர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் என்பவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று குறிப்பிட்டார். அதன்படி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளது.

என்ன சட்டம்
திமுகவின் இந்த திட்டத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2016 ஜூலை மாதம் 16ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ எஸ் கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ள போது அவர் அவையில் உள்ள எந்த எம்எல்ஏவையும் நீக்க முடியாது. கட்சியின் கொறடா கோரிக்கை வைத்தாலும் தகுதி நீக்க முடியாது, என்று ஆணையிட்டது.

இதுவரை நீக்க முடியாது
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இருந்தால், எல்லா எம்எல்ஏக்களும் வாக்களித்து, அதில் அவர் வெற்றிபெற்றால் மட்டுமே, அதன்பின்பே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். சபாநாயகருக்கே பெரும்பான்மை இல்லை என்றால், அவரால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அருணாசலப்பிரதேச சட்டசபையில் இதே போன்றதொரு வழக்கு வந்த போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

திமுக திட்டம்
இந்த அரசியலமைப்பின் 10வது சட்டப்பிரிவுதான் தற்போது திமுகவிற்கு கைகொடுக்க உள்ளது. அதன்படி 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நினைத்தால் அவருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அதில் வெற்றிபெறும் வரை சபாநாயகர் மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இப்படி ஒரு சிக்கலில்தான் அதிமுக தற்போது மாட்டி இருக்கிறது.

மெஜாரிட்டி இல்லை
தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி பெறக்கூடிய அளவிற்கு எம்எல்ஏக்களை பெறாமல் போனால் இந்த 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நினைக்கும். அப்படி நடந்தால் திமுக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். இதனால் தகுதி நீக்கம் தடைபட்டு, மெஜாரிட்டி இல்லாததால் சபாநாயகரே மாற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் இந்த அதிரடி திட்டத்தை அதிமுக எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளது.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications