சூனாபானா கேரக்டர்.. 11 தோல்வி பழனிசாமி! பாஜகவுக்காக தேர்தல் புறக்கணிப்பு.. எகிறி அடித்த எ.வ.வேலு!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்காவது எடப்பாடி பழனிசாமி வருவாரா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக அமைச்சர் எ.வ.வேலு, தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய கோழை பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர்!
11 தோல்வி பழனிசாமி:
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, '11 தோல்வி பழனிசாமி' என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாதம்தாங்கி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலீபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?
சட்டசபை நிகழ்ச்சிகள்:
'சட்டசபையில் நான் 2 மணி நேரம் பேசிய வீடியோவை கேட்டால் தரவில்லை' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன? என தெரிந்து கொண்டாவது பழனிசாமி பேட்டி கொடுத்திருக்கலாம். அதிமுக ஆட்சியில், 'சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், 'நிதி நெருக்கடி காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு வாய்ப்பில்லை' என்று நீதிமன்றத்தில் கையை விரித்தவர்கள்தான், இன்று நேரடி ஒளிபரப்பை செய்யும் எங்களைப் பார்த்து வியாக்கியானம் பேசுகிறார்கள். அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகளை அரசின் திரைப்படப் பிரிவின் சார்பில் வீடியோ எடுத்து எடிட் செய்து அவர்கள்தான் டிவிக்களுக்கு வழங்கினார்கள். அதில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. எதிர்க் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது நினைவில் இல்லையா?
நீட் தேர்வு:
மாணவர்களின் மருத்து கனவை சீரழிக்கும் நீட் தேர்வை தனது ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வந்து துரோகம் செய்தவர் பழனிசாமி. அதை மறைக்க திராவிட மாடல் அரசின் மீது வீண்பழியை சுமத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏ.கே.ராஜன் கமிட்டி நியமனம், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் ரத்து மசோதா என நீட் தேர்வை ரத்து செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் திராவிட மாடல் அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நீட் தேர்விற்கு எதிராக திமுக அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் போராடியது. அப்படி நடத்திய போராட்டங்களை அதிமுகவால் பட்டியல் காட்ட முடியும்? "நீட் தேர்வு விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து ஓராண்டுக்கு வெளியிலேயே தெரியாமல் அதிமுக ஆட்சியில்தான் இருந்தது. சட்டப்பேரவையில் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை" என முதலமைச்சர் கேள்வியெழுப்பி பழனிசாமியின் துரோகத்தை தோலுரித்தார். அதற்கு பதில் சொல்ல கோழை பழனிசாமிக்கு துணிவு இருந்ததா?
சூனாபானா கேரக்டர்:
நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என பிடிவாதமாக நடைமுறைப்படுத்தி வரும் பாஜகவோடு அதிமுக கள்ளக்கூட்டாளி வைத்திருக்கிறது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என 'இந்தியா'கூட்டணியை வலுப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராகுல் காந்தியும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார். துரதிஸ்டவசமாக மீண்டும் பாஜக ஆட்சிக் கட்டிலேறிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யாமல் ஆதிக்கம் செய்யும் தனது கள்ளக்கூட்டாளி பாஜகவைப் பற்றி விமர்சிக்க கோழை பழனிசாமிக்கு மனம் வரவில்லையே ஏன்? எடப்பாடி பழனிசாமி உறவினர் என்.ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. அடுத்து நம்ம வீட்டுக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் பழனிசாமிக்கு இருக்குமல்லவா? ''கோபால் என்னை போல தைரியமான ஆளா... பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா'' என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி.
மகளிர் உரிமைத் தொகை:
மகளிர் உரிமைத்தொகையையும், மகளிர் விடியல் பயணத்தையும் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவருடைய ஆட்சியில் காயலான் கடை கணக்காக ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்துகள் வாங்கி தமிழ்நாடு முழுக்க விட்டிருக்கிறது திராவிட மாடல அரசு. அதிலும் மகளிர் இலவச பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை முற்றிலும் புதுமையானதாகவும் சிறப்பானதாகவும் வடிவமைத்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் பேருந்தில் செல்பவர்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியும். விடியல் பயணம் திட்ட பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தியிருக்கிறார்.
அதிமுக ஆட்சி:
அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 இலட்சம் கோடிக்கும் மேலாக கடன் வாங்கியபோதும் அதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் சிறப்பு திட்டம் எதையும் செயல் படுத்தாமல் ஊழல் ஆட்சி நடத்திய ஊதாரி பழனிசாமி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்த்தி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் அரசின் திட்டங்களின் மூலம் பயனடைய செய்திருக்கும் திராவிட மாடல் அரசைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.
திமுக திட்டங்கள்:
கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்கிறார்கள் இந்த கடனை எப்போது அடைப்பார்கள் என்று என்னவோ ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக எடப்பாடி ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திரனும் திறமையும் முதல்வருக்கு உண்டு. எடப்பாடி அவர்களே... எங்கள் முதலமைச்சர் இன்றைக்காகவோ நாளைக்காகவோ சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக சிந்திக்கும் அக்கறையுள்ள ஒரு தலைவர்.
அண்ணா பல்கலை விவகாரம்:
அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் அதிமுகவினரிடம் கேட்டு அவர்களின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார். முதலமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி வந்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் வீராவேசமாக பழனிசாமி பேசியிருப்பதை பார்த்து மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாநகர் சிறுமி வழக்கில் அதிமுகவை சேர்ந்தவருக்கு இருந்த தொடர்பு சந்திக்கு வந்துள்ளதை மறைக்க பழனிசாமி நடத்திய கபட நாடகம்தான் யார் அந்த சார்? எனும் வதந்தி அரசியல் என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது.
தந்தை பெரியார் - சீமான்:
தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி. இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம். தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியான யுஜிசி அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பதான் பாஜகவின் அடியாளான சீமான் இப்படி பேசி இருக்கிறார் என்று புரிந்தததால்தான் பாம்புக்கும் வலிக்காமல் தடிக்கும் வலிக்காமல் பார்த்துக்கொண்டு கண்டிக்கிறார் பழனிசாமி. இதற்கு பதிலாக அண்ணா திமுக என்னும் பெயரையே அமித்ஷா திமுக என்றோ ஆர்எஸ்எஸ் திமுக என்றோ மாற்றிக் கொள்ளலாம்.
பொள்ளாச்சி விவகாரம்:
பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பதில் சொல்ல முடியாதவர் சட்டமன்றத்தில் வாங்கி கட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் வெளியே போய் பொய்களை விதைத்திருக்கிறார். எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அந்த முதலமைச்சர் பதவிக்கு சிறுமைதான் சேர்த்தார். தன்மானத்துக்கும் சுய கௌரவத்துக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக்கே இழுக்காகவும் அவமான சின்னமாகவும் ஒன்றிய அரசுக்கு கும்பிடு போட்டு அடிமையாகி தமிழ்நாட்டு மாண்பையே குலைத்தவர் பழனிசாமி." என கூறியுள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications