J Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்று காலை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் தொழில் துவங்குகிறதா பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ..? மொத்தம் 11.. முதல்வர் அதிரடி கடிதம்
மருத்துவமனை அறிக்கை
இந்தநிலையில், மருத்துவமனை தலைமை செயலதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரிலா இன்ஸ்டியூட் மற்றும் மருத்துவ மையத்தின் பிரத்தியேக கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனை பிரிவிலல், ஜெ.அன்பழகன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
மூச்சுத்திணறல் பிரச்சனையுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் முகத்தில் பொருத்தக்கூடிய ஆக்சிஜன் வழங்கும் கருவி மூலமாக அவரால் ஆக்சிஜன் சுவாசிக்க முடிந்தது. ஆனால் பிறகு சுவாசத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
வென்டிலேட்டர்
தற்போது அவர் 80% அளவுக்கான ஆக்சிஜன் சப்ளையை வென்டிலேட்டர் மூலமாக பெற்று வருகிறார். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர்கள்
இதனிடையே, சில மூத்த திமுக தலைவர்கள், இன்று அதிகாலை, அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விசிட் செய்துள்ளனர். ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அவர்கள் சென்று, மருத்துவர்களிடம் அன்பழகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.