விஸ்வரூபம் எடுத்த மாட்டு சிறுநீர் பேச்சு.. மன்னிப்பு கேட்டார் திமுக எம்பி செந்தில்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்களில்தான் பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்கும் (பாஜக) என்ற தமது பேச்சுக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் லோக்சபாவில் பேசிய திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக ஜெயிப்பதுதான் பலம். நாங்கள் இந்தி பேசும் மாநிலங்களை Gau Mutra (மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்கள்) என்றுதான் அழைப்போம் என கூறினார்.

DMK MP Dr Senthil Kumar seeks apologize for Gau Mutra States remark

திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாரின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் டாக்டர் செந்தில் குமார் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதேபோல மாட்டு சிறுநீர் என்கிற வார்த்தையை பயன்படுத்தி டாக்டர் செந்தில் குமார் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+