விஸ்வரூபம் எடுத்த மாட்டு சிறுநீர் பேச்சு.. மன்னிப்பு கேட்டார் திமுக எம்பி செந்தில்குமார்!
சென்னை: மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்களில்தான் பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்கும் (பாஜக) என்ற தமது பேச்சுக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் லோக்சபாவில் பேசிய திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக ஜெயிப்பதுதான் பலம். நாங்கள் இந்தி பேசும் மாநிலங்களை Gau Mutra (மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்கள்) என்றுதான் அழைப்போம் என கூறினார்.

திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாரின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் டாக்டர் செந்தில் குமார் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 5, 2023
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதேபோல மாட்டு சிறுநீர் என்கிற வார்த்தையை பயன்படுத்தி டாக்டர் செந்தில் குமார் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்?












Click it and Unblock the Notifications