தூத்துக்குடியில் கனிமொழி போட்டி உறுதியானது.. திமுக சார்பில் விருப்பமனு அளித்தார்!
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார்.
தற்போது அவர் இதற்காக விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்.
திமுகவின் ராஜ்யசபா எம்பியாக கனிமொழி இருக்கிறார். இவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி முடிவெடுத்துள்ளார்.

திமுக தற்போது போட்டியிடும் வேட்பாளர்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறது. இதற்கான விருப்பமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. திமுக சார்பாக நேற்று முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு எடுத்து இருக்கிறார். தற்போது அவர் இதற்காக விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவர் விருப்ப மனு அளித்தார். இவர் தனது தொண்டர்களுடன் சென்று விருப்பமனு அளித்தார்.












Click it and Unblock the Notifications