600/600 எடுத்த நந்தினி.. சிலரே கோலோச்சும் படிப்பு! சிலிர்த்துப்போய் பாராட்டிய திமுக எம்பி அப்துல்லா
சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகள் முன்பெல்லாம் மருத்துவர், பொறியாளர் ஆவேன் என்று கூறி வந்த நிலையில், 600 க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சொன்னதை கேட்டு திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பாராட்டி இருக்கிறார். அப்படி எந்த துறையை அவர் தேர்வு செய்ய விரும்பினார்?
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இதுவரை நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் மொத்த மதிப்பெண்களை விட 5 அல்லது 10 மதிப்பெண்கள் குறைவாக பெறுவது வழக்கம்.

ஆனால், இது வரை இல்லாத அளவுக்கு மாணவி திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று 600 க்கு 600 என முழு மதிப்பெண்களையும் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணவி நந்தினி, "என் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. என்னால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. கல்விதான் நமக்கு சொத்து என பெற்றோர் என்னிடம் சொல்லி வளர்த்தனர். நானும் அதை இடைவிடாமல் கடைபிடித்தேன். அதன் விளைவாகவே இவ்வளவு மதிப்பெண்களை என்னால் எடுக்க முடிந்தது.
நம்பிக்கையோடு முயற்சி செய்தால் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம். ஆடிட்டராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சிஏ பயிற்சி எடுக்க உள்ளேன். அதற்கான மேல்படிப்புகளை படிக்க இருக்கிறேன்." என்றார். முழு மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மாணவி ஆடிட்டராக விரும்பியதை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "முன்பெல்லாம் எங்கள் குழந்தைகள் டாக்டராவேன் இஞ்சீனியர் ஆவேன் என்றுதான் படித்தார்கள். எங்கள் குழந்தைகள் பெருவாரியாகப் பொறியியல் சென்ற பிறகு "தெருவுக்கு நாலு எஞ்சீனியரிங் காலேஜ்!! அதெல்லாம் ஒரு படிப்பா!?'' என தூற்றப்பட்டார்கள். அப்படியும் பொறியியலை ஆக்கிரமித்து இன்று உலகெங்கிலும் கொடி நாட்டுகின்றார்கள் எங்கள் பிள்ளைகள்!!
டாக்டருக்கு ஆசைப்படுற.. இரு உன் கனவை காலி செய்றேன்னு நீட் கொண்டு வந்து எம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நசுக்கினார்கள். இனி அதற்கு முட்டுவதை விட செலவின்றி சிஏ படிக்க போவோம் என்று எம் பிள்ளைகள் சிஏ படிப்பின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
நீட் வந்த பிறகு பெருவாரியான குழைந்தைகள் சிஏ படிக்கத் துவங்கி இருப்பதை கடந்த நான்கைந்து ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு எங்கள் குழந்தைதான் இன்று 600/600 எடுத்து சாதனை படைத்துள்ளது. சிலர் மட்டுமே கோலோச்சும் ஆடிட்டர் துறை இனி முழுக்க முழுக்க எங்கள் பிள்ளைகளால் நிரம்பி வழியத் துவங்கும்! வாழ்த்துகள் மகளே." என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications