அந்த நேர்மை புடிச்சிருக்கு.. “இத்துப்போன வந்தே பாரத்” - என்னை பாராட்டாதீங்க - திமுக எம்பி அப்துல்லா
சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், இந்த ரயில் சேவைக்காக தான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் தன்னை பாராட்ட வேண்டாம் எனவும் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து ஏற்கனவே கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 ஆம் தேதி 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் குறிப்பாக திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் சென்னை - ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சேவையை யார் கொண்டு வந்தது என எம்பிகள், அரசியல் கட்சிகளிடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தன்னை வந்தே பாரத் ரயிலுக்காக பாராட்ட வேண்டாம் என பேஸ்புக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா பதிவிட்டு உள்ளார்.
அதில், "புதிய வந்தே பாரத் ரயிலுக்காக எனக்கு நன்றி தெரிவித்து எழுதி என்னை டேக் செய்துள்ளனர் சில நண்பர்கள். ரயில்வேத் துறைக்காக அதிகம் கோரிக்கைகள் வைத்து நாடாளுமன்றத்தில் பேசுபவன், கடிதங்கள் எழுதுபவன் என்பதால் வந்தே பாரத் ரயிலுக்கும் நான் முயற்சி செய்து இருப்பேன் என நினைத்து ஒருவேளை எனக்கு நன்றி தெரிவித்து இருக்கலாம்.
உண்மையில் வந்தே பாரத் ரயில் வந்ததற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்காக நான் நாடாளுமன்றத்தில் பேசியதும் இல்லை. அமைச்சர் ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் கடிதம் அனுப்பவும் இல்லை. வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர் வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.
எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாளைக்கு அம்பானிக்கோ அதானிக்கோ சலுகை விலையில் விற்பதற்காக இன்றே ஓட்டப்படும் ஹைகிளாஸ் ரயில்தான் வந்தேபாரத்! நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பேஸ்புக் பதிவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள எம்.எம்.அப்துல்லா, "வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர்வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.. எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளார். புதுக்கோட்டை அப்துல்லாவின் இப்பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications