அஞ்சலகங்களில் இந்தி படிவங்களா? போராடி தமிழ் படிவங்களை கொண்டு வந்த திமுக எம்.பி. அப்துல்லா
சென்னை: புதுக்கோட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இந்தியில் வழங்கப்பட்ட சலான்கள் திமுக எம்.பி. புதுகை அப்துல்லாவின் முயற்சியால் தமிழ் மொழியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டைத் தபால் நிலையத்தில் இருக்கும் அனைத்து சலான்களும் ஹிந்தியில் இருப்பதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வந்தது. அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்பொழுது தமிழில் மாற்றப்பட்டு உள்ளது. முயற்சியும்அதன் விளைவும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியில் வழங்கப்பட்ட முந்தைய படிவங்கள்; தற்போது தமிழில் வழங்கப்பட்ட படிவங்கள் ஆகியவற்றின் படங்களையும் அந்த ட்விட்டர் பக்கத்தில் அப்துல்லா எம்.பி பதிவிட்டிருக்கிறார்.
புதுகை அப்துல்லா எம்.பி.யின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications