இளையராஜா விவகாரம்..தேவையில்லாமல் திமுகவை வம்பிழுக்க வேண்டாம்! எல் முருகனுக்கு ஆர் எஸ் பாரதி காட்டம்
சென்னை: தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல் முருகன் எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என திமுக முதன்மை செயலாளரும் எம்பியுமான ஆர். எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் கருத்துக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இளையராஜாவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவும் குவிந்து வருகிறது. அந்த வகையில் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல் முருகன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

என்ன குற்றம் செய்தார்?
அவர் கூறுகையில் இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா? கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது.

திமுக எதிர்ப்பு
திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதையே அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது என எல் முருகன் கூறியிருந்தார். இந்த நிலையில் இவரது கருத்திற்கு திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல் முருகன் கருத்து
அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் எல் முருகன் தேவையில்லாமல் எங்களை (திமுகவை) வம்புக்கு இழுக்க வேண்டாம். பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது குறித்து திமுக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது எங்களை வம்புக்கு இழுப்பது ஏன்?

மீண்டும் ஒரு வழக்கு தொடரணுமா?
முரசொலி நாளிதழ் தொடர்பாக எல் முருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும் போது இளையராஜா விவகாரத்தில் நாங்கள் கருத்தே சொல்லாமல் இருக்கும் போது எங்களை வம்புக்கு இழுத்து மீண்டும் ஒரு வழக்கை தொடர வழிகோலிட வேண்டாம்.
Recommended Video

இளையராஜாவுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா?
எல் முருகன் தனது போக்கை திருத்திக் கொள்ளவிட்டால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்து சுதந்திரம் என்பது இளையராஜாவுக்கு மட்டும்தானா? இளையராஜாவின் கருத்தை விமர்சனம் செய்வதற்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications