அரசியலிலும் டெலிட் ஆப்ஷன் இருந்தால்.. ரஜினியின் பல பேச்சுக்களை நீக்கலாம்.. ரவிக்குமார் பொளேர்!
ரஜினிகாந்தை விமர்சித்து எம்பி ரவிக்குமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "எதுக்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவணும்? இதுக்கு அவர் ஒரு புது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே" என்று ரஜினிகாந்த் கருத்தை விமர்சித்திருந்த எம்பி ரவிக்குமார், தற்போது மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பதிவு நீக்கத்திற்கு "அரசியலிலும் இப்படிதான் நடந்திருக்கும்" என்.ற இடித்துரைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
லீலாபேலஸில் ரஜினிகாந்த் பேசியதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருந்தனர். அந்த வகையில் திமுக எம்பி ரவிக்குமாரும் இதை பற்றி சொல்லும்போது, "ரஜினியின் திட்டங்கள் அவர் தன் தொண்டர்கள் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என்கிறார்.. தொண்டர்கள்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் புதுசா ஒரு கருத்தை சொல்கிறார்... தங்கள் உயிரை கூட இழப்பதற்குத் தயாராக இருக்கும் தொண்டர்களை அவமானப்படுத்தும் கருத்தாக இது உள்ளது.

மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல தமிழக அரசியல் இருப்பதாகக் சொல்கிறார்... எதற்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவ வேண்டும்? அவர் ஒரு புதுப் பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. பாசிச மனநிலையில் ரஜினி பேசுகிறார்.. அடிப்படையில் அவர் நல்ல மனிதர்தான்.. ஆனால், அவருடைய கருத்துகள் ஆபத்தாக உள்ளது... மக்களுக்கு எதிரான கருத்துக்களாக உள்ளது... சுருக்கமாக அரசியல் கட்சி குறித்த புரிதல் அவருக்கு இல்லை" என்று விளாசியிருந்தார்.

இப்போதும், ஒரு ட்வீட் பதிவிட்டு சாடியுள்ளார்.. ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றினை ட்விட்ரில் வெளியிட்டு, பிறகு அது தவறான தகவல் என்பதால் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.. இது மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பதிவினை நீக்கியதற்கு காரணம், நீதான், நீயேதான் என்று குடுமிப்பிடி சண்டைகளை ரஜினி ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பதிவு நீக்கம் குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் சொல்லும்போது, "கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் அவர்களின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
உடனே ட்விட்டர்வாசிகளோ, "Sir wait....அடுத்த tweet varum..பாருங்க... அட்மின் போட்டது எனக்கு ஒண்ணுமே தெரியாது"என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications