திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: திமுக நாடாளுமன்ற எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று கொரோனா காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி வசந்த குமார் காலமானார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவின் மூத்த தலைவர்கள் ஜெ அன்பழகன் கொரோனா காரணமாக காலமானார். தமிழகத்தில் இப்படி வரிசையாக அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக, திமுக என்று வேறுபாடு இன்றி பல தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்பி வசந்தகுமார்.. 2-ஆவது மக்கள் பிரதிநிதி!
இந்த நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.