Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன? நாராயணனுக்கு ஆதரவாக வந்தவருக்கு கிண்டலாக பதில் கொடுத்த திமுக எம்.பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ட்விட்டரில் பாஜக நாராயணன், திமுக எம்.பி செந்தில் குமார் இடையே வார்த்தை மோதல் நடந்த நிலையில், பாஜக ஆதரவாளரின் கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் செந்தில் குமார்.

"நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார் பாஜக ஆதரவாளர் ஒருவர். அதற்கு, "மக்கள் ஓட்டு போட்டு" என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி செந்தில் குமார்.

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் எழுப்பி இருந்த கேள்விக்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் பதில் அளித்தார். அதில் இருந்த எழுத்துப் பிழைகளை விமர்சித்திருந்தார் பாஜக நாராயணன்.

நாராயணன் ட்வீட்

டிசம்பர் 14ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக விமர்சித்தார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் "ஒன்றிய அரசின்" சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல், இந்திய அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என்று தெரியுமோ?" என ட்வீட் செய்திருந்தார் நாராயணன்.

பதவியேற்பு உறுதிமொழி

பதவியேற்பு உறுதிமொழி

திமுக கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது முதலே, மத்தியில் ஆளும் பாஜக அரசை குறிப்பிட 'ஒன்றிய அரசு' என்ற பிரயேகத்தைப் பயன்படுத்தி வருகிறது. முன்பு மத்திய அரசு எனப் பயன்படுத்தி வந்த நிலையில், ஆங்கிலத்தில் இருக்கும் Union Government என்பதனை ஒன்றிய அரசு என்பதாகக் குறிப்பிட்டு வருகின்றனர் திமுகவினர். இதற்கு பாஜகவினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பாஜகவின் நாராயணன் திருப்பதி உதயநிதி பதவியேற்பு உறுதிமொழி எடுத்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

யாருக்குமே அறிவு இருக்காதா?

யாருக்குமே அறிவு இருக்காதா?

நாராயணன் திருப்பதியின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார், "பாஜகவில் யாருக்குமே அறிவு இருக்காதா?
சரி மூன்றாம் வகுப்பு கிளாஸ் எடுப்போம்
நாட்டின் பெயர்-இந்தியா
மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு
Union Govt-ஒன்றிய அரசு
State Govt-மாநில அரசு
மிஸ்டர்.நாராயணா, நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்பு
புரியுதோ.. சரி, இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்" என கிண்டல் செய்திருந்தார்.

கற்று தருகிறேன்

அதற்கு நாராயணன் திருப்பதி, எம்.பி செந்தில்குமாரின் ட்வீட்டில் இருந்த எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி 'ஏற்ப்பு' அல்ல ஏற்பு! 'புறியுதோ' அல்ல புரியுதோ! என்ன செய்வது!! ஆங்கிலேயே அடிவருடிகள், 'Google Translate' மூலம் தமிழ் கற்று கொண்டால் தமிழ் அறிவு வளராது தான். மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து விட்டு வரவும். Union என்றால் என்ன? State என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன் எனக் கூறினார்.

அவரே தப்பா எழுதியிருக்கார்

அவரே தப்பா எழுதியிருக்கார்

இதுகுறித்து எம்.பி செந்தில் குமார், "நான் ஆங்கிலத்தில் படித்த போதும் தமிழில் சொந்தமாக கருத்துகளை எழுதி பதிவிட்டு வருகிறேன். இதனால் சில வார்த்தைகளில் தவறு வருவது இயல்பு. தமிழைத் தவறின்றி எழுத முயன்ற வருகிறேன், நான் எழுதும் தமிழில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் நாராயணன் திருப்பதி எழுதிய தமிழ் வார்த்தைகளிலும் சில தவறுகள் உள்ளன, இது அவருக்கும் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒட்டு போட்டு

மக்கள் ஒட்டு போட்டு

இந்த விவகாரத்தில் ட்விட்டரில் பாஜக ஆதரவாளர் ஒருவர், "முதலில் தமிழ்ல ஒழுங்கா எழுது. பிறகு பாஜகவை பத்தி பேசலாம்.. நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, "மக்கள் ஓட்டு போட்டு" என்று ரிப்ளை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி செந்தில் குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+