Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுசரிபட்டு வராது.. நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்.. அடியோடு மாறும் காட்சிகள்.. அப்போ காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பணிகளில் திமுக தலைமை தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு தேர்தலின்போது இருந்த அதே கூட்டணியைத் தக்கவைக்க திமுக விரும்பினாலும், புதிய கட்சிகளின் வருகையும், பழைய கூட்டணிக் கட்சிகளின் கூடுதல் கோரிக்கைகளும் திமுகவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

Tamil Nadu dmk

2021 கூட்டணிக் கணக்கு: ஒரு பார்வை

தற்போதைய பேச்சுவார்த்தையில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள், கடந்த 2021 தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே இருந்தவ. கடந்த முறை திமுக தனது சொந்தச் சின்னத்தில் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், மதிமுக, எம்.எம்.கே, கொமதேக போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட்டதால், மொத்தம் 188 தொகுதிகளில் அந்தச் சின்னம் களமிறங்கியது.

இதுதவிர, காங்கிரஸிற்கு 25 இடங்களும், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

தேமுதிக-வின் வருகையும் காங்கிரஸின் நிபந்தனையும்

இந்த முறை தேமுதிக கூட்டணியில் இணைய இருப்பது தொகுதிப் பங்கீட்டுக் கணக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது. தேமுதிக தரப்பில் 18 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடம் கோரப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கணக்குப்படி, அவர்களுக்கு 9 இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே வழங்க திமுக திட்டமிட்டுள்ளது.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. 2011-ல் 63 இடங்களிலும், 2016-ல் 41 இடங்களிலும் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் தலைவர்கள், இந்த முறை தங்களுக்கு சுமார் 40 இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

திமுகவின் கறார் நிலைப்பாடு

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள் வலுவாக இருந்தாலும், திமுக தனது செல்வாக்கைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. சமீபத்தில் டெல்லியில் திமுக பிரமுகர் ஒருவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே நடந்த ஆலோசனையில், திமுக தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது:

முதற்கட்டமாக, கடந்த முறையை விட 3 இடங்கள் மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டு, மொத்தம் 28 இடங்கள் வரை தர திமுக முன்வந்துள்ளது.

மிகக்கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒருவேளை அதிகபட்சமாக 30 இடங்கள் வரை வழங்கப்படலாம் என்றும், அதற்கு மேல் ஒரு இடத்தைக் கூட விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க, திமுக குறைந்தபட்சம் 165 தொகுதிகளிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

"தேமுதிக மற்றும் காங்கிரஸின் கூடுதல் கோரிக்கைகளை ஏற்க வேண்டுமானால், திமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் தங்களின் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு கட்சிக்குக் கூடுதலாக ஒதுக்கினால், அது மற்ற கட்சிகளிடமும் அதே போன்ற கோரிக்கையைத் தூண்டும்," என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி அறிவிப்பு எப்போது?

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு தனிக் குழுவை விரைவில் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+