ப.சிதம்பரத்துக்குப் போனை போட்ட மு.க.ஸ்டாலின்.. 3 நிமிடம் பேசி.. நலம் விசாரிப்பு!
சென்னை: ஐ.என்.எக்ஸ். வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்தார்.
சுமார் 3 நிமிடம் வரை நிகழ்ந்த அந்த தொலைபேசி உரையாடலில் ப.சிதம்பரத்துக்கு நம்பிக்கையூட்டக் கூடிய வகையிலும், உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுமாறும் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல் நபராக ஸ்டாலின் தம்மை அழைத்து நலம் விசாரித்தது ப.சிதம்பரத்துக்கு நெகிழ்ச்சியை அளித்ததாம்.

ஸ்டாலின் பேச்சு
திஹாரில் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஒரு வழியாக நேற்றிரவு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்நிலையில் இன்று காலை ப.சிதம்பரத்தை தொலைபேசி மூலம் அழைத்த ஸ்டாலின், உடல்நலம் பற்றி சிதம்பரத்திடம் விசாரித்துள்ளார். அவரும் சிறையில் இருந்த போது தனக்கு ஏற்பட்ட உபாதைகள் குறித்து விளக்கியுள்ளார்.

நெகிழ்ச்சி
மேலும், நடக்கும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், உங்கள் கைது மோடிக்கு தான் பின்னடைவு என சிதம்பரத்திடம் ஸ்டாலின் நம்பிக்கையூட்டியுள்ளார். பதிலுக்கு புன்னகைத்த சிதம்பரம் தம்மிடம் இருக்கும் மனதிடம் ஒருபோதும் குறையாது எனக் கூறியுள்ளார்.

சட்டவல்லுநர்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அது தொடர்பாக ஸ்டாலின் 2 முறை கருத்து தெரிவித்திருந்தார். முதல்முறை பேட்டியளித்த போது, ப.சி. ஒரு சட்ட வல்லுநர் என்பதால், அவரே அதை பார்த்துக்கொள்வார் என்றும், பிறகு பொருளாதார மந்தநிலையை திசை திருப்ப ப.சி. கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி
ப.சிதம்பரத்தை ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பேசியது பற்றி விசாரித்ததில், கூட்டணிக் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற்றது, மற்றபடி இதைப்பற்றி கூற ஒன்றுமில்லை என பதில் கிடைத்தது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications