வடநாட்டு சேட்டுக்கு சீட்? காங்.,க்கு கல்தா கொடுத்த அறிவாலயம்! ஒரே வார்த்தையில் டீலை முடித்த தலைகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது காங்கிரஸ். கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு, அதுவும் ஒரு சீட்டை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக கூறியதாக சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவடைந்து இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு பேச்சு நடத்தி இருக்கிறது.
வழக்கம்போல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூடுதல் சீட்டுகள் என காங்கிரஸ் பேசியதால் கடும் அதிர்ச்சியில் திமுக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் வென்றதால் இந்த முறை கூடுதல் தொகுதிகளை தர வேண்டும் என கேட்டதாம்.

ஆனால் கடந்த முறை போல 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் அதுவும் சில தொகுதிகளில் மாறி போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவிடம் 2 ராஜ்யசபா சீட்டுகளை கேட்டு வலியுறுத்தியுள்ளது காங்கிரஸ் மேலிடம். ராஜ்யசபாவில் காங்கிரசுக்கான எதிர்க் கட்சி அந்தஸ்துக்கு சில இடங்கள் தேவைப்படுகிறதாம். அதனால், திமுகவிடம் 2 சீட்டுகளை எதிர் பார்க்கிறதாம் காங்கிரஸ் கட்சி.
ஆனால், வட மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் அந்த சீட்டை ஒதுக்குவீர்கள். வட மாநில காங்கிரஸ் காரர்கள் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாவதை திமுக விரும்ப வில்லை. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. அதனால் காங்கிரசுக்கு 1 சீட் ஒதுக்குகிறோம். அதுவும், அந்த 1 ராஜ்யசபா சீட்டும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களில் இருந்து ஒருவருக்கு கொடுக்க வேண்டும்.
அந்த உறுதியைத் தந்தால்தான் 1 சீட்டும் ஒதுக்கப்படும். அப்படி தமிழக காங்கிரஸ் தலைவர் யாருக்கேனும் ஒதுக்கினால் எங்களுக்கு சந்தோசம். அதுவும் பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்ற சீனியர் காங்கிரஸ்காரராக இருந்தால் எங்களுக்கு கூடுதல் சந்தோசம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கே.சி.வேணு கோபாலிடம் அழுத்தமாக சொல்லிவிட்டராம். தற்போது இந்த தகவலும் காங்கிரஸ் மேலிடத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
- சிறப்பு செய்தியாளர் எழில்
-
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்!











Click it and Unblock the Notifications