Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகாலாந்து "நாய்க்கறி" சர்ச்சை கருத்து! ஆளுநர் ரவி விமர்சனத்திற்கு.. ஆர்எஸ் பாரதி தந்த பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகளை ஏற்க முடியாது என்று ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்பட்டது முதலே இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது தொடர்ச்சியாக மோதல் ஏற்பட்டே வந்தது.

 DMK RS Bharathi explains about his statement on nagaland dog meat as TN Governor Ravi opposes it

பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் கூட அரசு தயாரித்துக் கொடுத்த பேச்சில் சில வார்த்தைகளை அவர் தவிர்த்தது எல்லாம் புதிய சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்தே வந்தது.

மோதல் போக்கு: மேலும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தர மறுப்பதாகவும் தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தற்போது மற்றொரு விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாடு ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாடு அரசை ஆளுநர் ரவி வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகத் தெரிவித்த பாரதி, தொல்லை கொடுப்பதற்கென்றே ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆர் எஸ் பாரதி: தொடர்ந்து பேசிய ஆர் எஸ் பாரதி, "இதற்கு முன்பு ரவி ஆளுநராக இருந்த நாகாலாந்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர். நான் சொல்கிறேன் என நீங்கள் தப்பா நினைத்துக் கொள்ளக் கூடாது, இதை ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள்.. அவர்களே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டிவிட்டார்கள்... அப்படியிருக்கும் போது உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம்?" என ஆவேசம் காட்டினர்.

இந்தப் பேச்சு தான் சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், இதற்கு ஆளுநர் ரவி பதிலளித்திருந்தார். ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி , "நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 'நாய் கறி உண்பவர்கள்' எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

விளக்கம்: மேலும், பல்வேறு பாஜகவினரும் ஆர்எஸ் பாரதியின் இந்தக் கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் ஆர்எஸ் பாரதி தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். ஆளுநர் தனது பேச்சைத் திசைதிருப்ப முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை Gauhati உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+