ட்விட்டர் ஸ்பேஸில் எல்லை மீறிய RS பாரதி மகன் பேச்சு.. திமுகவை விட்டு நீக்கணும்.. கொந்தளிக்கும் பாஜக!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் பேசிய எக்ஸ் ஸ்பேஸ் ஆடியோ பரவி வரும் நிலையில், அவரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளது தமிழக பாஜக.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு வீடுகளுக்குள் நீர் புகுந்தது. சில பகுதிகளில் 6 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத நிலை உள்ளது. மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக செலவு செய்யப்பட்ட 4000 கோடி ரூபாய் என்ன ஆனது என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். வெள்ள பாதிப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவரும் அரசை விமர்சனம் செய்திருந்தார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ஆர்எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியுள்ளார் சாய் லட்சுமிகாந்த். மேலும், வெள்ள பாதிப்பு குறித்து திமுக அரசை விமர்சித்த பத்திரிகையாளருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதியின் பேச்சுக்கு பாஜக மாநில துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "எதை கொண்டு அடிப்பது? பரதேசிப்பயலே, உன்னையெல்லாம் நிம்மதியா வாழவே விடக்கூடாது பரதேசி நாயே, புறம்போக்கு பயலே' என்று சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்த ஊடகவியலாளர் குறித்து தரக் குறைவாக விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி உள்ளிட்ட திமுக ஐடி விங் பிரிவை சார்ந்தவர்கள்.

அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் வாழவே விடக்கூடாது என்று சொல்வதா? மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமையில் 'அந்த பொம்பளை' என்று விமர்சித்துள்ளது பெண் இனத்தையே கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும் செயல். இந்த 'ட்விட்டர் ஸ்பேஸ்' தளத்தில் பேசிய அனைவரின் மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்குமான முதல்வர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை சற்றும் மதிப்பாரேயானால், இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்." என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
இன்று அறிவிக்கப்படும் தமிழக தேர்தல் தேதி! இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்! -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது!










Click it and Unblock the Notifications