திமுக தேர்தல் பணிக்குழு நியமனம்… அன்பழகன் அறிவிப்பு
சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமை தேர்தல் பணிக்குழு தலைவராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
குழுவில் கிரிராஜன், துறைமுகம் காஜா, பூச்சி முருகன், அசன் முகமது ஜின்னா, நீலகண்டன் இடம்பெற்றுள்ளனர். சரவணன், அருண், முத்துக்குமார், ராஜ்குமார், வேலுச்சாமி, தாமோதரன் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தலை ஒட்டி எழும் பிரச்சனைகள் குறித்து தேர்தல் பணிக் குழுவை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
DMK's 11-member election work committee announcement