திமுகவில் இனி திருநங்கைகளும் உறுப்பினர்கள்.. கட்சி விதியில் மாற்றம்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த திமுகவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இறந்த எம்எல்ஏ, பரிதி இளம்வழுதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அது போல் சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பலியான சுபஸ்ரீக்கும் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்துக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி, அண்ணா உள்ளிட்டோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிர்வாகிகளின் பொறுப்பு
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர், முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி, டிஆர் பாலு, கனிமொழி, ஐ பெரியசாமி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும்.

திமுக பொதுக் குழு
திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது, வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருங்காட்சியகம்
இதை தவிர்த்து முக்கிய தீர்மானமாக கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைப்பது, தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்யக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டாட்சி முறை
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில் கூட்டாட்சி அமைப்பு முறையை திமுக வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைப்பதை ஏற்காது என்றார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின்












Click it and Unblock the Notifications