இந்த சீட் இவருக்குனு எந்த உறுதியும் இல்ல.. ஜெயிக்கிற ஆள் தான் வேட்பாளர்: ஸ்டாலின் பேசியது என்ன?
சென்னை: யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் நமது வேட்பாளராக இருப்பார் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் புனரமைப்பு பணிகள் நடப்பதால், சென்னை தியாகராயர் நகரில் தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தயாராக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன. திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். திமுக இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதியன்று சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை. நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை. தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பேசிய ஸ்டாலின், இளைஞரணியின் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் பணிகள் பன்மடங்கு வேகமெடுத்துள்ளன. சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டை 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications