நேருவுக்கு நேரம் சரியில்ல..செந்தில் பாலாஜிக்கு பொங்குனாங்களே! குறுக்கே திருச்சி சிவா..திமுக திகுதிகு
திருச்சி: சைவ வைணவம் குறித்து அவதூறாகவும் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் பேசியதாக அமைச்சர் பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்பி-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் சீனியர்களின் ஒருவரான கேஎன் நேருவை ஓரம் கட்டும் வகையிலேயே திருச்சி சிவாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கிசுகிசுக்கின்றனர். செந்தில் பாலாஜி வீட்டில் ஈடி சோதனயின் போது பொங்கிய திமுக, நேரு விவகாரத்தில் மவுனம் காப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர் திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள்.. என்ன நடக்கிறது என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது.!
திமுகவைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம்தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளரின் ஆதிக்கம் இருக்கும்.
உதாரணத்திற்கு விழுப்புரம் பொன்முடி, திருச்சி கேஎன் நேரு, திருவண்ணாமலை எவ வேலு, திண்டுக்கல் ஐ பெரியசாமி என பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல மூத்த முன்னாள் அமைச்சர்களே உதயநிதியை தற்போதைய முதல்வராக ஏற்றுக் கொண்டது போல் தான் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருக்கமான சில அமைச்சர்கள், சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேஎன் நேரு தொடர்ந்து கட்சியில் ஓரம் கட்டுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திருச்சியை பொறுத்தவரை கேஎன் நேரு ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் திமுக மாவட்ட 3ஆக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கேஎன் நேரு மாநில பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் எம்பி ஆக இருக்கும் நிலையில் தேர்தலின் போது பல உள்ளடி வேலைகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோரை குறி வைத்து திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும், இதில் பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக அருண் நேரு உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போதும் கைது நடவடிக்கையின் போதும் திமுக கடும் எதிர் வினையாற்றியது. பல முக்கிய நிர்வாகிகள் சோதனை நடந்த போதே செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை திமுகவின் பதிலடி மிக கடுமையாக இருந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் திமுக தான் வழக்கு தொடர்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பார்த்துக் கொண்டது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு கொடுத்த முக்கியத்தை, மிக மூத்த சீனியரான கேஎன் நேருவுக்கு கொடுக்கவில்லை என பொங்குகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அமலாக்கத்துறை நேருவை குறி வைத்து சோதனை நடத்திய நிலையில் திமுக தலைமை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மேலும் எல்லாவற்றிற்கும் பேட்டி கொடுக்கும் சட்ட அமைச்சர் ரகுபதியும், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது அவரது ஆதரவாளர்கள் தலையில் இடியை இறக்கியது போல ஆகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது திருச்சி சிவாவுக்கு திமுக துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பது கே.என்.நேருவின் ஆதரவாளர்களை மீண்டும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே மிகவும் இளையவரான அன்பில் மகேசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதோடு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமை கழகப் பதவி என்பதால் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலிருந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைப்பது போல திருச்சி சிவாவுக்கும் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
இது எல்லாம் நேரு ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கேஎன் நேரு திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது எல்லாம் தனிக்கதை. இப்படி தொடர்ந்து திமுகவில் நேருவிற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், அப்படி எல்லாம் இல்லை. எப்போதும் போல் நேருவுக்கு ஸ்டாலினும் ஸ்டாலினுக்கு நேருவும் பக்கபலமாக இருப்பார்கள். இதெல்லாம் எதிர்க் கட்சியினர் கிளப்புவிடும் வதந்தி என்கின்றனர் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications