ஒரே நாடு ஒரே தேர்தல்.. சல்லி சல்லியா நொறுக்கிய திமுக! மத்திய அரசு இதை எப்படி சமாளிக்கப்போகுதோ?
சென்னை: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், "கட்டாயமாக இது முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு பொருத்தமற்றது. 1996 ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு இன்னொரு தேர்தல் நடைபெற்றது.
1999 ஆம் ஆண்டு மூன்றாவது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போதெல்லாம் மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு, அதோடு தேர்தலை நடத்துவதாக சொல்வதே தவறு. அப்படி நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற கனவிலே அவர்கள் அதை சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் 5 ஆண்டு காலம் ஆட்சி இருக்க வேண்டும். மக்கள் வாக்களிப்பது 5 ஆண்டு ஒருவர் ஆட்சியில் இருப்பதற்காகதான். அதை மீறி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதோ, அல்லது ஒரு மாநிலத்துக்கு தேர்தல் வரும்போதோ மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கலைத்துவிட்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? நாடு ஒரே தேர்தல்.. சல்லி சல்லியா
இந்த சிந்தனையே தவறானது. இதற்கு அரசியலமைப்பு சட்டமும் இடம் கொடுக்காது. மக்களும் இடம்கொடுக்க மாட்டார்கள். அதை புரிந்துகொள்ளாமல் இவர்கள் பேசுகிறார்கள் என்றாலும் அந்த சட்டத்திற்கு முன்னால், அந்த சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது, நடைமுறைப்படுத்துவது என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இந்த மாற்றங்கள் எல்லாம் வெற்றிபெறுமா? மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்துவிட்டுதான் சொல்ல முடியும்." என்றார்.
-
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications