இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. "அவர்" வருவாரா.. உதயநிதி ஸ்டாலின் விழாவில் பரபரப்பு.. என்னாச்சு?

உதயநிதி ஸ்டாலின் பூந்தமல்லி பகுதியில் நிவாரண உதவிகளை வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக சுமார் 6 மணி நேரமாக கொட்டும் மழையில் பெண்களை, திமுகவினர் காக்க வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு நிவாரண பொருட்களை பெற சென்றதால் பரபரப்பு.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆளும்கட்சியே காரணம் என்று அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது.. அதிலும் எடப்பாடி பழனிசாமி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் திமுகமீது புகார் சொல்லி வருகிறார்.

ஆனால், திமுகவோ, அதிமுக மீது பழியை போட்டு வருகிறது.. இந்த 10 வருடமாகவே இவர்கள்தான் ஆட்சியில் இருந்தனர் என்றும், அலட்சியப் பணிகள், டென்டர்களில் நடைபெற்ற ஊழல்களே இன்றைய அவலநிலைக்கு காரணம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.

 எம்எல்ஏ

எம்எல்ஏ

மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டாலும் இரு கட்சிகளுமே நிவாரண பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.. கனமழை பாதிப்புகளை சரிசெய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஒருவாரமாகவே, ஆய்வு நடவடிக்கையில் இறங்கி வருகிறார் முதல்வர்.. அதேபோல, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் தொடர்ச்சியாக மழையால் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

 நிவாரண உதவி

நிவாரண உதவி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பை உதயநிதி ஸ்டாலின் வழங்கி வருகிறார்.. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்குவதற்காக, உதயநிதி ஸ்டாலின் வருகை தர போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.. குறிப்பாக, சென்னை பூந்தமல்லி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்க உதயநிதி ஸ்டாலின் வருவதாக அறிவிப்பு வெளியானதுமே, அந்த பகுதியில் எதிர்பார்ப்பு கூடியது.

திமுக

திமுக

எனவே, காலை முதலே சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டும் மழையிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் திமுகவினர் காக்க வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்..

சர்ச்சை

சர்ச்சை

அதன் பிறகு வந்த உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் நின்றிருந்ததால், பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டும், கூச்சலிட்டும், நிவாரணப் பொருட்களை வாங்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... அதேபோல, மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண பொருட்களின் பைகளில், கருணாநிதி, ஸ்டாலின் போட்டோவுடன் உதயநிதி படமும் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+