Periyar Row: பெரியாரே மண்ணுதான்.. சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதிலடி-அமைச்சர் முத்துசாமி
சென்னை: தமிழ்நாடு தந்தை பெரியார் மண் அல்ல.. பெரியாரே எங்களுக்கு எல்லாம் ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவருவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர் பதிலடி தருவோம் என ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தொடர்பான தரவுகளை வைத்து அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிப்பதில் எங்கேயாவது சிக்கல் இருந்தால் அங்கே நேரிலேயே சென்று நாங்கள் ஆய்வு செய்வோம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர்கள் வந்தாலும் வராவிட்டாலும் கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு வழக்கமாகவே வந்து கொண்டிருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வருவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. உரிய நேரத்தில் முடிவு செய்வோம்.
திமுகவில் அதிமுகவை இணைக்க எம்ஜிஆர் விரும்பினார் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார். இதுபற்றி ஒரு கேள்வி பதிலில் விளக்கம் தந்துவிட முடியாது. பல்வேறு கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள்... அது குறித்து விரிவாகத்தான் பேச முடியும். இப்போது தேர்தல் பணிகளில் இருப்பதால் அதுபற்றி பின்னர் பேசலாம்.
தந்தை பெரியாரை ஒரு மண்ணு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். இதற்கு எல்லாம் தேர்தலுக்குப் பின்னர் பதில் தருவோம். தந்தை பெரியார் யார் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தெரியும்.. சீமான் கைது செய்யப்படாதது குறித்து செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி இருக்கிறார். தேர்தல் முடிவடைந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சீமான் பேசியது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுக்கோட்டையில் பேசிய சீமான், இது பெரியார் மண் அல்ல.. தமிழர் மண்.. சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் சமூக சீர்திருத்தவாதி அல்ல.. சமூகத்தை சீரழித்தவர்.. தந்தை பெரியார் மண் என யாராவது பேசினால் கொலை வெறியாகிவிடும் என கூறியிருந்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications