தட்டித் தூக்கும் திமுக.. தமிழகத்தில் 170 இடங்களை வெல்லும்.. அதிமுகவுக்கு 68.. ரிபப்ளிக் எக்சிட் போல்
திமுக தலைவர் ஸ்டாலின் ஜெ.பாணியிலான அரசியலை கையில் எடுப்பாரா?
சென்னை: ரிபப்ளிக் - சிஎஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.. அதில், திமுகவுக்கு 160 முதல் 170 வரை இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. அதிமுகவுக்கு 58 முதல் 68 வரை இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அமமுகவுக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல், கடந்த 6ம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.. எனினும் எக்ஸிட் போல்கள் என்று சொல்லப்படும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் ரிபப்ளிக் - சிஎஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.. அதில், திமுகவுக்கு 160 முதல் 170 வரை இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. அதிமுகவுக்கு 58 முதல் 68 வரை இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அமமுகவுக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மநீம, நாம் தமிழர் கட்சி உட்பட பிற கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பே, பல்வேறு நிறுவனங்களின் ஏராளமான கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. அவைகளில் திமுகவுக்கே முதலிடம் என்றும் 150+ இடங்களை கண்டிப்பாக எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆளும் அதிமுக அரசுக்கு 70-க்கும் குறைவான இடங்களே வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டிருந்தது.. அவ்வாறே இந்த முறையும் எக்ஸிட் போல்களின் முடிவுகள் தெரியப்படுத்தி வருகின்றன.
எப்படி தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார்களோ, அதுபோலவே, இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்பிலும் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications