சாம்சங்கை விடுங்க.. ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கத்திற்காக போராடும் திமுக! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுகவின் தொழிற்சங்கத்திற்காக, அக்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 1990களில் தனியார்மயம் மற்றும் தாராளமயம் என இரண்டு கொள்கைகள் அப்போதைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் முளைத்துள்ளன. ஆனால் இந்த தொழிற்சாலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது. விடுமுறையில் தொடங்கி அடிப்படை ஊதியம், வேலை வாய்ப்பு உரிமை, பணி பாதுகாப்பு என பல தளங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுரண்டப்படுகிறார்கள்.

எனவே தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிகமாகும்போதும், உழைப்பு சுரண்டல் எல்லை மீறும்போது தொழிற்சங்கம் குறித்த கோரிக்கையை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இப்படித்தான் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கை எழுந்திருந்தது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனமும், அரசும் தொழிற்சங்கத்திற்கு எதிராக நின்றதால், சிஐடியு தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
மறுபுறம் ரயில் பெட்டி உற்பத்தி ஆலையான ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கம் வேண்டும் என்றும், இதற்காக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் திமுக, சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஐசிஎஃப்-ல் தொழிலாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்க பணியாளர்கள் கவுன்சில் இருக்கிறது. ஆனால் இதில் நிர்வாக தலையீடு அதிகமாக இருப்பதாகவும், போதுமான தொழிலாளர் இந்த கவுன்சிலில் இல்லாததால், கவுன்சில் ஐசிஎஃப் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. எனவே தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று மஸ்தூர் யூனியன் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதே கோரிக்கையுடன் திமுக ஐசிஎஃப் தொழிலாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் 2011ல் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்த மனு ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக மேல் முறையீடு செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கம் வைப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது. மேலும், சங்கத்திற்காக ரகசிய வாக்கெடுப்பை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என ஐசிஎஃப் பொது மேலாளர் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைக்க போராடியபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது ஐசிஎஃப்-ல் சங்கம் வேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்று வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
"திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது".. நோன்பு நிகழ்வில் உதயநிதி உறுதி! -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications