Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாம்சங்கை விடுங்க.. ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கத்திற்காக போராடும் திமுக! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுகவின் தொழிற்சங்கத்திற்காக, அக்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1990களில் தனியார்மயம் மற்றும் தாராளமயம் என இரண்டு கொள்கைகள் அப்போதைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் முளைத்துள்ளன. ஆனால் இந்த தொழிற்சாலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது. விடுமுறையில் தொடங்கி அடிப்படை ஊதியம், வேலை வாய்ப்பு உரிமை, பணி பாதுகாப்பு என பல தளங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுரண்டப்படுகிறார்கள்.

chennai icf dmk

எனவே தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிகமாகும்போதும், உழைப்பு சுரண்டல் எல்லை மீறும்போது தொழிற்சங்கம் குறித்த கோரிக்கையை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இப்படித்தான் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கை எழுந்திருந்தது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனமும், அரசும் தொழிற்சங்கத்திற்கு எதிராக நின்றதால், சிஐடியு தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

மறுபுறம் ரயில் பெட்டி உற்பத்தி ஆலையான ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கம் வேண்டும் என்றும், இதற்காக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் திமுக, சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஐசிஎஃப்-ல் தொழிலாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்க பணியாளர்கள் கவுன்சில் இருக்கிறது. ஆனால் இதில் நிர்வாக தலையீடு அதிகமாக இருப்பதாகவும், போதுமான தொழிலாளர் இந்த கவுன்சிலில் இல்லாததால், கவுன்சில் ஐசிஎஃப் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. எனவே தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று மஸ்தூர் யூனியன் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதே கோரிக்கையுடன் திமுக ஐசிஎஃப் தொழிலாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் 2011ல் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்த மனு ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக மேல் முறையீடு செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கம் வைப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது. மேலும், சங்கத்திற்காக ரகசிய வாக்கெடுப்பை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என ஐசிஎஃப் பொது மேலாளர் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைக்க போராடியபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது ஐசிஎஃப்-ல் சங்கம் வேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்று வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+