திமுக மகளிர் உரிமை மாநாடு! சோனியா காந்தி -மெகபூபா முப்தி சென்னை வருகை எதிரொலி! போலீஸ் குவிப்பு!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் சென்னை வருகை தருவதால் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மாநாடு நடைபெறும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுமட்டுமல்ல விமான நிலையம், சோனியா காந்தி பயணிக்கும் பாதை, அவர் தங்குமிடம் என பல்வேறு இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி சென்னை வருவதால் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்றிரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திமுக மகளிர் உரிமை மாநாட்டில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டுத் தலைமை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திமுக மகளிர் உரிமை மாநாட்டு உரை: சோனியா காந்தி
சிறப்பு அழைப்பாளர்கள்:
மெஹபூபா முஃப்தி ,
முன்னாள் முதலமைச்சர், ஜம்மு & காஷ்மீர்
தலைவர், மக்கள் ஜனநாயகக் கட்சி
பிரியங்கா காந்தி வத்ரா,
பொதுச் செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
சுப்ரியா சுலே, எம்.பி.,
செயல் தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி
டிம்பிள் யாதவ் எம்.பி
சமாஜ்வாதி கட்சி
லெஷி சிங்
பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் &
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஐக்கிய ஜனதா தளம்
ஆனி ராஜா
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி &
பொதுச்செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
சுபாஷினி அலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் &
பொலிட் பீரோ உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
சுஷ்மிதா தேவ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் &
தேசிய செய்தித் தொடர்பாளர், திரிணாமுல் காங்கிரஸ்
ராக்கி பிட்லன்
டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர்
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சி
மாநாடு ஏற்பாடு மற்றும் முன்னிலை: கனிமொழி எம்.பி., துணைப் பொதுச்செயலாளர், திமுக.












Click it and Unblock the Notifications