கைவிட்ட பாஜக.. கை வைத்த ஸ்டாலின்.. அவருக்கு கோடநாடு, இவருக்கு புளியந்தோப்பு.. சிக்கலில் தலைவர்கள்
அடுத்தடுத்து அதிமுக தலைவர்கள் சிக்கலில் சிக்கி வருகிறார்கள்
சென்னை: அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக மேலிடம் சிக்கி வருகிறது.. கொடநாடு விவகாரம், புளியந்தோப்பு கட்டிடம் என இரு முக்கிய விவகாரங்களை திமுக கையில் எடுத்துள்ளது.. இதில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.
Recommended Video
ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக, தன்னுடைய அதிரடியை காட்ட துவங்கியது.. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்தது.
ஆனால், அதிமுக மேலிடத்தையே அசைத்து பார்க்கும்படியாக, கொட நாடு விவகாரத்தை தூசி தட்டி உள்ளது திமுக அரசு.. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்ததாக முக்கிய குற்றவாளியான சயன் தெரிவித்ததுமே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது.

5 பேர்
இந்த வழக்கை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டாலும், ஓபிஎஸ், வேலுமணி என 5 முக்கிய மாஜிக்களுக்கு சிக்கல் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை பெரிதாக்கினார்.. நேற்று சட்டசபையை புறக்கணித்தார்.. தர்ணாவிலும் அதிமுகவினருடன் ஈடுபட்டார்.. திமுகவை கண்டித்து காரசாரமாக பேட்டியும் தந்தார்...

ஆளுநர்
அப்போதும் கலக்கம் தீராமல், அவசர அவசரமாக ஆளுநரை சென்று முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்... திமுக எங்களை பழிவாங்குகிறது என்று புகாரும் தந்தனர்.. எப்பவுமே சிரித்து கொண்டே பேசும் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரம் கிளம்பியதில் இருந்து இப்போதுவரை அப்செட்டில் உள்ளதாகவே இருப்பதாக தெரிகிறது.

பதற்றம்
அதற்குள் இன்றைய தினம் ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.. நேற்றைய தினம் இந்த கட்டிடத்திற்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசனும், சேகர்பாபும் நேரில் சென்றபோதே ஓரளவு விஷயம் புரிந்துவிட்டது.. செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர். அதற்கேற்றபடி, புளியந்தோப்பு கட்டிட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தி உள்ளது மிகுந்த பரபரப்பை கூட்டி உள்ளது.

ராஜேந்திர பாலாஜி
கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை, ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் கடிவாளம் போட்டாகிவிட்டது என்றுதான் அதிமுக மேலிடம் நினைத்தது.. ஆனால் திமுக அரசோ, இரட்டிப்பு வேகத்தோடு இந்த வழக்கின் விசாரணையை தொடங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.. தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதிமுக தலைமையிடம் சொல்லலாம்.. ஆனால், இவர்களுக்கே பிரச்சனை உள்ளதே என்று நினைத்தாரோ என்னவோ, ராஜேந்திரபாலாஜி ஸ்டிரைட்டாக சுப்ரீம்கோர்ட்டுக்கே போய்விட்டார்.. இவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது..

விதிமுறைகள்
இந்த வழக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னை ஹைகோர்ட் விசாரிக்கிறது என்று தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக போடப்பட்ட வழக்கு அது.. பால்வள துறையில் முறைகேடு செய்திருந்தாலும், இந்த வழக்கில்தான் ராஜேந்திர பாலாஜி சிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது, திமுக அரசு மீதான பயத்தையே வெளிப்படுத்தி உள்ளது..

அரசியலா?
எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் நம்பிக்கையாக இருந்தார்.. அதன்படி, அதிமுகவில் மற்றவர்கள் சிக்குவார்களே தவிர, தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயாது என்று நினைத்திருந்தார்.. அதனால்தான், பீதியில் இருந்த மாஜிக்களுக்கே தைரியம் சொல்லி கொண்டிருந்தார்.. இப்போது, ஸ்டாலின் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலையில் கைவைத்துவிட்டார்.. இது இயற்கையாக நடந்ததா? அரசியலா என்பது உறுதியாக தெரியாது...

கேள்வி
ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் சிக்கலில் சிக்கியுள்ளதில், அவர்களிடம் ஒருவித பதற்றத்தை காண முடிகிறது... நேற்றைய தினம் பேரவை புறக்கணிப்பு, தர்ணா முதல் முன்பு ஆளுநர் சந்திப்பு வரை அதைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது... இதில், தனியார் தொலைக்காட்சிகள் செய்தியால் தனியாக சிக்கிக்கொண்ட ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார் என்பது அனைவரது கேள்வியாக உள்ளது...

டெல்லி
இதில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடக்கப்போகும் விளைவுகளை உணர்ந்துதான், டெல்லியின் பாதுகாப்பை கேட்டு, அதிமுக மேலிடம் தூது சென்றதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்புக்கு பாஜக உதவியாக இருந்ததாக ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது.. அத்துடன் வேலுமணி ரெய்டு விவகாரத்திலும் சப்போர்ட் செய்து தன்னுடைய எதிர்ப்பை காட்டியது..

கோபம்
இந்த கோபமும் மக்களிடம் உள்ளதை பாஜக மேலிடம் நன்கு அறிந்துள்ளது.. அதனால்தான், அதிமுக மேலிட பிரச்சனைகள் தொடர்பாக யாரும் உதவ கூடாது என்று பாஜக மேலிடம் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது... இப்போது பாஜகவும் கைவிட்ட நிலையில் அதிமுக என்ன செய்ய போகிறது? ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தங்களை எப்படி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க போகிறார்கள்? திமுக அடுத்து என்ன செய்யும்? என்பதெல்லாம் எதிர்பார்ப்பாகவே உள்ளது.. பார்ப்போம்..!
-
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்












Click it and Unblock the Notifications