பி.எப் கணக்கில் இருந்து அட்வான்ஸ் எடுக்குறீங்களா? இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க.. வெளியான அட்வைஸ்
சென்னை: பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான சில முக்கியமான அறிவுறுத்தல்களை சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. இது தொடர்பான இபிஎப் ஓ நிறுவனம் வெளியிட்ட அறிவுறுத்தல்களை விவரமாக பார்க்கலாம்.
அமைப்புசார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழியரும், வேலை கொடுக்கும் நிறுவனத்தினரும் இதில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்த வேண்டும். ஊழியர்களின் அவசர கால தேவை மற்றும் ஓய்வு காலத்தில் மிகச்சிறந்த சேமிப்பாக இந்த வருங்கால வைப்பு நிதி உள்ளது.

நிதி சேவை நிறுவனங்கள்
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் திருமணம், கல்வி, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்காக தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியத்தின் இணையத்தில் வங்கி கணக்கு போல பயனர்கள் தங்கள் ஐடி எண்ணை கொடுத்து பிரத்யேகமாக அக்கவுண்டை பாராமரித்துக்கொள்ள முடியும்.
இந்த சேவையை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்க சில சந்தாதாரர்கள் பிரவுசிங் செண்டர், சேவை மையங்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், பல இணையதள நிறுவன செயல்பாட்டாளர்கள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குவதற்கு பெரும் தொகையை வசூலிப்பது தெரியவந்துள்ளது.
விழிப்புடன் செயல்பட வேண்டும்
இதனால், இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தலை பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, சந்தாதாரர்கள், வீட்டில் இருந்தபடியே இலவசமாக இந்த சேவையை பெறலாம்: இந்த சேவைக்காக நிதி சேவை நிறுவனங்கள் அல்லது ஏஜெண்டுகளை சந்தாதாரர்கள் அணுக வேண்டாம் என்று வருங்கால வைப்புநிதி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 'இந்த சேவையில் ஈடுபடும் தனியார் நிதி சேவை நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதியால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இதனால், நிதிச்சேவை நிறுவனங்கள் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து சந்தாதாரர்கள் பணம் எடுக்கும்பட்சத்தில் அவர்களின் நிதி தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தக்கூடும் அபாயம் உள்ளது. எனவே, சந்தாதாரர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று சந்தாதாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
ஏடிம்மில் பணம் எடுக்கும் வசதி
சந்தாதார்ரக்ள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை திரும்ப எடுப்பதில் உள்ள சிரமங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை பி.எப் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில், வரும் ஜூலை 1 முதல் ஏடிஎம் வாயிலாக பிஎப் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பிஎப் கணக்கில் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக அறிந்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பி.எப் கணக்கில் முன்பெல்லாம் பணம் எடுக்க வேண்டும் என்றால் கணக்கில் முன்கூட்டியே முன்பணம் வேண்டும் என்றால் 3 நாட்களில் எடுத்துக் கொள்ளலாம். திருமணம், கல்வி, வீடு கட்டுவதற்கு என பிஎஃப் தொகையிலிருந்து முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications