தர்பார் படத்தை சட்டவிரோத இணைய தளங்களில் வெளியிடக் கூடாது: சென்னை ஹைகோர்ட்!
சென்னை: தர்பார் திரைபடத்தை சட்டவிரோத இணைய தளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் இந்தியா முழுக்க 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
தற்போது இந்த படத்தை இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது
Darbar Movie Review in Tamil: முதல் பாதி ஜோர்.. இரண்டாம் பாதி போர் .. ரஜினியின் தர்பார்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தர்பார் திரைப்படத்தை 1370 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.