ஓ..இதுதான் அந்த ரகசியமா? கார், பைக்கில் போகும் போது எல்லாம் சரியாக இருந்தும் போலீஸ் பிடிப்பது ஏன்?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? அப்படீன்னா இந்த வீடியோவை நீங்கள் பாருங்கள்.. போலீஸ் உங்களை பிடிக்க என்ன காரணம் என்பதை அறியலாம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் ஹெல்மெட் போட்டிருந்தாலும், எல்லா ஆவணங்களும் வண்டியில் சரியாக இருந்தாலும் வாகன சோதனையில் இருசக்கர வாகனங்களை போலீசார் பிடிப்பார்கள்.. ஏன் இப்படி பிடிக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதேபோல் காரில் சீட் பெல்ட் போட்டு ஒழுங்காகவே சிலர் பயணிப்பார்கள்.

காரில் உள்ள ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கும். ஆனால் காரையும் போலீசார் சோதனை என்ற பெயரில் பிடிப்பார்கள். இதேபோல் தான் சரக்கு வாகனங்கள், லாரிகள் என எல்லா வாகனங்களையும் போலீசார் வாகன சோதனையில் பிடிக்கிறார்கள். அப்படி போலீசார் பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளது
அந்த வீடியோவில் போலீசார் கூறும் போது, "கார், பைக்கில் போகும் போது எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை ஏன் பிடிக்கிறாங்க.. அப்ப நீங்க இதை பண்ணாம விட்டிருப்பீங்க.. என்னென்று யோசிக்கிறீங்களா.. அதுதான்ங்க உங்கள் நம்பர் பிளேட்.. அரசின் ரூல்ஸ்படி உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட் வளையாமலும், துருப்பிடிக்காமலும் இருக்க வேண்டும். உங்கள் நம்பர் பிளேட்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாமே ஒரே அளவோடு சீராக இருக்க வேண்டும்..
உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் உடைந்தோ, அல்லது நம்பர் பிளேட் இல்லாமலோ இருக்கக்கூடாது... இந்த விதிமுறைகளை பின்பற்றினால் உங்கள் பயணம் இனிதே அமையும் " என்று கூறியுள்ளனர்.
Attention motorists...
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) June 19, 2024
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...#Trafficawareness #RoadSafety #Chennai #ChennaiTraffic @SandeepRRathore @R_Sudhakar_Ips @chennaipolice_ @roadraja pic.twitter.com/Tjr91vuQBJ
அதேநேரம் முக்கியமான இன்னொரு விஷயம்.. இது சென்னைக்கு மட்டும் கண்டிப்பாக பொருந்தும்.. சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். உங்கள் பின்னால் உட்கார்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால், நீங்கள் 500 அபராதம் செலுத்த வேண்டியது வரும். அதேபோல் சென்னையில் உள்ள மால்களுக்கு போகிறீர்கள் என்றால், வெளியில் எங்கும் மறந்தும் வாகனத்தை நிறுத்தாதீர்கள்..
அப்படி நிறுத்தி சென்றால், திரும்ப வரும் போது அந்த வாகனம் காவல் நிலையத்தில் தான் இருக்கும். டோவ் போட்டு உங்கள் வண்டியை தூக்கி சென்றுவிடுவார்கள். மற்ற நாட்களைவிட ஞாயிறுகளில் கண்டிப்பாக எந்த மால்கள் முன்பும் வாகனத்தை நிறுத்தாதீர்கள். பார்க்கிங் பகுதியில் மட்டும் நிறுத்துங்கள். நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் திரும்ப வரும் போது, 750 ரூபாய் கப்பம் கட்ட வேண்டியது வரும். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லை என்றால் அதற்கு ஒரு அபராதமும், கட்ட வேண்டியது வரும். எனவே வாகன ஓட்டிகளே சென்னையில் உஷாராக இருங்கள்.












Click it and Unblock the Notifications