இதுதான் கடைசி.. உங்க கிட்ட பான் கார்டு இருக்கா? உடனே போய் இதை பண்ணுங்க.. வந்தது அறிவிப்பு
சென்னை: பான் கார்டு வைத்து இருக்கும் நபர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.
நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.

பான் அட்டை: லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது.
அதன்பின் வரும் ஜூன் 31ம் தேதி வரை கட்டணத்துடன் 1000 ரூபாய் செலுத்தி பான் அட்டையை இணைக்க முடியும். அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே அபராதத்தை தவிர்க்க உடனே நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைக்க வேண்டும்.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. அதே சமயம் இந்த கட்டாய விதியில் இருந்து சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. பின்வரும் நபர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
1. அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
2. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

3. முந்தைய ஆண்டில் எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. அதாவது கடந்த வருடம் உங்களுக்கு 80 வயது ஆகி இருந்தால் இதை இணைப்பது கட்டாயம் கிடையாது.
4. இந்திய குடிமகன் அல்லாதவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்து இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பான் அட்டை இருந்தாலும் அதை இணைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் உங்களிடம் ஆதார் இருக்காது.
5. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும் இவர்கள் விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யாத பயனர்கள் இருவரும் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில், முன் உள்நுழைவு மற்றும் பின் உள்நுழைவு முறையில் இணைக்கலாம்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications