தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் எங்கு நிற்கும்? கட்டணம் எவ்வளவு?
சென்னை: தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா விரைவு ரயிலின் கட்டணம் என்ன, எங்கெல்லாம் நிற்கும் என்பது குறித்து பார்ப்போம்.
தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ரயில் பயணம்தான் எளிதானது. அலுப்பு தெரியாமல் ஏறினதும் தெரியாமல் இறங்கியதும் தெரியாமல் அலேக்காக வீடு போய் சேரலாம். ஆனால் இதில் முன்பதிவு செய்ய வேண்டியது உள்ளது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

ஆனால் நாம் எதிர்பார்க்காத திடீர் பயணங்களுக்கு என்ன செய்வது? முன்பதிவு செய்யப்படாத ரயில்களையும் பெட்டிகளையும்தான் அணுக வேண்டியுள்ளது.
இதுகுறித்து Film Food Fun & Fact எனும் வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு வண்டி குறித்து பார்ப்போம். முன்கூட்டியே பிளான் செய்யாமல் அவசரமாக சென்னையில் இருந்து தென் தமிழக நகரங்களுக்கு செல்லும் போது இரயில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதற்கு ஒரு சிறிய தீர்வு தான் இந்த அந்தியோதயா ரயில். இந்தியாவில் பல அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இது முன் பதிவு செய்ய முடியாது. 15 லிருந்து 20 பெட்டி எல்லாமே அன் ரிசர்வ் (UR) தான். மற்றவை எல்லாம் வாராந்திர ரயில்கள் மட்டுமே.
ஆனால் இந்தியாவிலேயே தினசரி இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இது மட்டுமே. இது தாம்பரத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு அடுத்த நாள் பகல் 12:50 க்கு சேரும். ( தாம்பரம் to நாகர்கோவில் Rs.275). இதில் உள்ள சிரமம் என்னவென்றால் இது 14 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அதாவது மற்ற ரயில்கள் 10 மணி நேரத்தில் சென்றடையும்.
ஆனால் இந்த ரயில் விழுப்புரம் வரை நேராக சென்று அங்கிருந்து கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று மீண்டும் நேரான பாதையில் செல்லும். இருந்தாலும் அதிக நெரிசல் இல்லாமல் பயணிக்க ஒரு சிறந்த வண்டி. இது IRCTC ஆப்பில் இருக்காது. இந்த ரயில் எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.
தாம்பரத்தில் புறப்படும் இது செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில். அது போல் நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications