Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வஞ்சிரம் , வவ்வால்.. திடீர்னு சறுக்கிய மீன்கள்.. சென்னை காசிமேடு காலி.. இனி 60 நாளைக்கு இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசிமேட்டில் எப்போதுமே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, ஒரே பரபரப்பும், பிஸியுமாக காணப்படும். ஆனால் நேற்றைய தினம் மீன் வாங்க கூட்டமே இல்லையாம்.. ஏன்?

எப்போதுமே ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Do you know Chennai Kasimedu Kadamba Vanjiram Fish rate and Fishing ban from midnight tonight

காரணம் : இதற்கு என்ன காரணம் என்றால், கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இதுபோன்ற நேரங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகளை பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்செல்லும்போது படகுகள், வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளதால், கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்திருக்கிறது.

இந்த மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். மீனவர்களுக்கும் வேலையின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும்.

படகுகள்: இந்த காலகட்டத்தில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகளை கடற்கரையில் நிறுத்திவிடுவார்கள்.. மேலும், மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். எனினும், சின்ன சின்ன படகுகள் மூலம், கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறும்என்பதால், மீன்களின் விலையும் ஓவராக அதிகரித்துவிடும்.

அந்தவகையில், இந்த வருடத்துக்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்று 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.. இந்த மீன் பிடி தடைக்காலம் மொத்தம் 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும். எனவே, முன்கூட்டியே மீனவர்கள், பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கொண்டுவந்து படகுகளை நிறுத்திவிட்டனர்.

வஞ்சிரம் மீன்: காசிமேட்டிலும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் நேற்றே கரைக்கு திரும்பிவிட்டன. எனவே, கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. எனினும், நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் தற்போது ரூ.800-க்கு விற்கப்படுகிறது. கடமா ரூ.200 வரை விலை குறைத்து குறைந்துவிட்டது.. மீன்கள் விலை குறைந்தாலும், அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.

கிராக்கி: வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. என்று விற்பனையாகி கொண்டிருக்கிறது. ஆனால், இனிமேல்தான் இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மீன்விலை அதிகரிக்க போகிறது.. மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+