தலைமை ஒதுக்கிய இடங்களிலும்.. விசிக-விடம் தட்டிப்பறித்த திமுகவினர்! நகராட்சி, பேரூராட்சிகளில் குமுறல்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நகராட்சி, பேரூராட்சியில் பதவிகளை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தனித்து கைப்பற்றியுள்ளது.
ஆனாலும் திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர்கள் பதவிகளை ஒதுக்கியது..

கூட்டணி தர்மம் மீறல்
இவ்வாறு ஒதுக்கினாலும் கூட நேற்று நடந்த மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர்கள் தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுகவின் கூட்டணி தர்மம் பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கிய நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவின் கைப்பற்றினர்.

ராஜினாமாவுக்கு வலியுறுத்தல்
இதனால் கூட்டணி கட்சியினர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‛‛கூட்டணி தர்மத்தை மீறியவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும்'' என வலியுறுத்தினர். இதையடுத்து காட்டமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுவினர் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்து வந்து என்னை சந்திக்க வேண்டும். மேலும் கழக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்'' என்றார்.

நெல்லிக்குப்பம்
திமுகவினர் பல இடங்களில் கூட்டணி தர்மத்தை மீறியதில் விடுதலை சிறுத்தைகள் 2 பதவிகளை இழந்துள்ளனர். அதன்படி கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுக மனு தாக்கல் செய்தது. திமுகவின் ஜெயந்தி 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

தருமபுரி மாவட்டம்
இதேபோல் தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் சின்னவேடி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இவரை எதிர்த்து திமுகவின் சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி எங்கே
இதுதவிர திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பதவிகளை பெற்றனர். கடலூர் மாநகராட்சி துணை மேயராக தாமரைசெல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக சுமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திண்டிவனம் நகராட்சி துணை தலைவராக ராஜலட்சுமி, ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவராக ரமேஷ் கர்ணா வாகை சூடினார். கடலூர் மாவட்டம் பென்னாடம் பேரூராட்சி தலைவராக அமுதலட்சுமி போட்டியின்றி தேர்வானார். அதேபோல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி துணை தலைவராக வினோத், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி துணை தலைவராக லலிதா ஆகியோர் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
இன்று டீல் முடிகிறது.. கமல்ஹாசனின் மநீமவிற்கு எத்தனை தொகுதிகள்? திமுகவுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
திருப்போரூர் தொகுதியில் நிற்க போவது யார்? யார் யாருக்கு அதிக வாய்ப்பு?












Click it and Unblock the Notifications