மகளிர் உரிமைத்தொகை.. தேதி குறித்த ஸ்டாலின்.. எப்படி விண்ணப்பம் செய்வது? முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் தமிழ்நாடு சட்டசபையில் வெளியிடப்பட்டது. ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்று பார்க்கலாம்.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது.

Do you know how to apply for the Magalir Urimai Thogai money Rs 1000 scheme this june

யாருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படலாம்

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை எப்படி விண்ணப்பம் செய்வது?

நேராக கார்ப்பரேஷன் அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

இதை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம்.

இ சேவை மையங்களின் வழியாக ஆன்லைனிலும் இதேபோல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேராக கார்ப்பரேஷன் அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டி இருக்கும்.

ஜூன் முதல் வாரம் விண்ணப்பம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாலும் ஜூன் 1ம் தேதியே புதிய விண்ணப்பங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அனுமதி பெறப்பட்டதும்.. விண்ணப்பம் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போன முறை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்பவர்கள்.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ரேஷன் கார்டு

இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஜூன் மதத்திற்கு முன் புதிய ரேஷன் கார்டு பெறுபவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+