ஃபிளைட்ல வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? தீயாய் பரவும் ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் கேள்வி!
மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ரோகிணி தியேட்டர் உரிமையாளரும் சங்க செயலாளருமான பன்னீர் செல்வம் யார் என்பது குறித்தும் அவர் கடந்த காலங்களில் பேசிய சம்பவங்களும் தீயாய் பரவி வருகிறது.
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவ மக்களை உள்ளே அனுப்ப தியேட்டர் நிர்வாகம் மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த யுஏ சான்றிதழ் கொண்டது. இந்த சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது. அதனால்தான் ஊழியர் அவர்களை அனுமதிக்கவில்லை. மற்றபடி அவர்கள் நரிக்குறவர்கள் என்பதற்காக உள்ளே அனுமதிக்கவில்லை என்பது தவறு என்றார்.

பன்னீர் செல்வம்
இதையடுத்து பன்னீர் செல்வம் யார் என்பதையும் ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். அந்த வகையில் பன்னீர் செல்வம் இதற்கு முன்னர் நிறைய கருத்துகளை பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் கொரோனா காலத்தில் பேசிய பேச்சுகள் மீண்டும் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று
2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

கொரோனா தாக்கம்
இந்த நிலையில் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகளும் முடங்கியது. கொரோனா தாக்கம் லேசாக குறைந்ததும் விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் ஒரு விழாவில் ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசிய போது கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து சிரமமான நிலையில் உள்ளனர். ரூ 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள்
திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும். திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications