ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? தெற்கு ஒடிஷா மாவட்டங்கள் அத்தனையும் ’சென்னை மாகாணத்தின்’ பகுதிகள் தெரியுமா?
சென்னை: ஒடிஷாவை ஒரு தமிழர் ஆட்சி செய்யவிடலாமா? ஒடிஷாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா? என ஒடிஷா சட்டசபை தேர்தல் களத்தில் இடைவிடாமல் கூச்சலிடும் பாஜக தலைவர்களுக்கு ஒடிஷாவின் மாவட்டங்கள் ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த வரலாறு தெரியுமா? என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றாக ஒடிஷா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுடன் பல்வேறு வகைகளில் மிக நெருக்கமானது ஒடிஷாதான். எல்லைகளால் மட்டுமல்ல.. மக்களாலும் நெருக்கமானது ஒடிஷாதான்.

நாடு விடுதலை அடைந்த போது மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத நிலையில் மாகாணங்கள் இருந்தன. அப்போதைய சென்னை மாகாணம் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து அண்டை மாநிலங்களின் பெரும் நிலப்பரப்பு சென்னை மாகாணத்தில்தான் இருந்தன. வடகேரளாவின் மலபார் பிராந்தியமும் லட்சத்தீவுகள் நிலமும் சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தன. இன்றைக்கும் ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தில் பயணித்தால் 1950-களில் சென்னை மாகாணத்தின் ஒரு அங்கமாக இருந்த பெயர் பலகைகளைப் பார்க்க முடியும். ஆம் ஒடிஷாவின் தென் பகுதி மாவட்டங்கள் பெரும்பாலானவை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்தன.

அதாவது ஒடிஷாவின் தெற்கு பதியில் உள்ள ஆந்திராவை ஒட்டிய கஞ்சம், கஜபதி, ராயபடா, கோரபுட், மல்காங்கிரி மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தவைதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின்னரே இன்றைய ஒடிஷாவுக்கு சொந்தமானவை இந்த நிலப் பகுதி.
அவ்வளவு ஏன்? தென் பகுதி ஒடிஷா மாவட்டங்களில் பெரும்பாலானோர் பூர்வகுடிகள். ராயகடா, கோரபுட், மல்காங்கிரி மலைகளில் ஆந்திரா எல்லையுடன் பெரும் எண்ணிக்கையில் ஆதி பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கோண்டுகள், கொதவாக்கள் என பல்வேறு பிரிவினராக இருக்கின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்றால் பேசும் மொழியானது பழந் தமிழை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பேசுவது ஒரியா மொழி அல்ல. இந்த பழங்குடிகள் பேசுவதை உற்று கேட்டாலே அதன் மொழி புரியும். இந்த பழங்குடிகளின் ஊர் பெயர்களை கவனித்து பார்த்தாலே கார்குழலி தொடங்கி அருந்தமிழில் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படை வரலாறு தெரியாமல்தான் சிலர், அய்யோ ஒடிஷாவை தமிழர் ஆட்சி செய்வதா? என ஓலமிட்டு அலறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications