நீங்கள் "இந்த" ஏரியாவா? டைம் என்னாச்சு பாருங்க! சட்டுனு வேலைய முடிங்க.. அப்புறம் உச் கொட்டுவீங்க!
சென்னை: சென்னையில் மின்பராமரிப்பு பணிகளின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எங்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறது தெரியுமா.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சுழற்சி முறையில் மின்சாரம் தடைபடுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அம்பத்தூர்: வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்: பல்லாவரம் இந்திராகாந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, ஓபராய் புதுதாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர், குட்வில் நகர், அமுதம் நகர், MEPS முழுவதும், சுப்ராயன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை: டி.எச். சாலை, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications