நீங்க கிரெடிட் கார்டை பயன்படுத்துபவரா.. அப்ப இந்த 3 விஷயத்தை மறந்தும்கூட செய்யாதீங்க.. நோட் பண்ணுங்க
சென்னை: கிரெடிட் கார்டை பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்ப இந்த தவறுகளை மறந்தும்கூட செய்துவிடாதீர்கள்.. எப்படி கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இப்போதெல்லாம் பணபரிவர்த்தனை எளிதாகிவிட்டது.. கையில் பணமே வைத்திருக்க தேவையில்லை.. இதற்கு உதவக்கூடிய ஒரு வழிவகைதான், கிரெடிட் கார்டு..
இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பதால், உங்கள் பட்ஜெட்டுக்கு மேல் நீங்கள் கொள்முதல் செய்யமுடியும்.. அதே நேரத்தில் மாதாந்திர அடிப்படையில் முழு/பகுதி பணத்தை திருப்பி செலுத்தவும் முடியும்..
வசதிகள்: குறுகிய அறிவிப்பில், பணம் கடன் வாங்க மற்றும் அதைத் தவணைகளில் திருப்பி செலுத்த (தேவைப்பட்டால்) அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.. கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.. இதற்காக தரப்படும் கடனட்டையை பாதுகாப்பா வைத்திருக்க வேண்டும்... கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும். இந்த நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது.. நண்பர்களுக்கும் கொடுக்கக்கூடாது
இந்த கிரெடிட் கார்டு சமீபகாலமாகவே பிரபலமாகி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.. உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும்கூட, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.. இது ஒரு வகையான கடன் ஆகும்...

பிளானிங்: ஆனால், இதை நீங்கள் பின்னாளில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும்.. இதற்கான சலுகை காலமும் உண்டு.. சலுகை காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வங்கி உங்களிடம் எந்த வட்டியையும் வசூலிக்காது... ஷாப்பிங் செய்தாலும்கூட, நிறைய சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கின்றன.
ஆனால் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் தேவையில்லாத சிக்கலில், நமக்கே தெரியாமல் நாம் மாட்டிக்கொண்டுவிடுவோம்.
அட்வான்ஸ்: கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்கலாம், ஆனால், அதற்கும் ஒரு லிமிட் உள்ளது.. இருந்தாலும், கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. காரணம், அப்படி பணம் எடுத்தால், அதற்காக நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்... அதுமட்டுமல்ல, கேஷ் அட்வான்சில் வட்டி இல்லாத கடன் காலத்தால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும்.
இரண்டு வகையான நிலுவைத்தொகை வசதி (ட்யூ அமவுண்ட்) இதில் உள்ளது.. ஒன்று மொத்தமாக நிலுவைத்தொகை, இன்னொன்று குறைந்தபட்ச நிலுவைத் தொகை...
நீங்கள் குறைந்தபட்ச நிலுவை தொகையை மட்டும் செலுத்தினால், உங்கள் கார்டு பிளாக் செய்யப்படாது... ஆனால் நிலுவை தொகைக்கு நீங்கள் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த வட்டி மொத்த தொகைக்கும் பொருந்தும். அதனால், கிரெடிட் கார் பேமண்ட் அதாவது கட்டணம்...செலுத்தும்போது எப்போதும் மொத்த நிலுவைத் தொகையை செலுத்திவிட வேண்டும்.
பலவீனம்: கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது.. ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவழிப்பவர்களை நிதி ரீதியாக பலவீனமானவர்களாக வங்கி கணக்கு போடுகிறது.. இது உங்கள் CIBIL ஸ்கோரை சேதப்படுத்தும்... இதனால், எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏதாவது ஏற்படலாம்.
பல முறை, ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள், ஒரு கார்டை திடீரென மூடி விடுவதுண்டு.. இது கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (கிரெடிட் யுடிலைசேஷன் ரேஷியோ) அதிகரிக்கலாம். காரணம், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் முன்பு இரண்டு கார்டுகளாக பிரிக்கப்பட்டது.
ஸ்கோர்: ஆனால் ஒரு கார்டு மூடப்பட்ட பிறகு, அது ஒன்றில் இருக்கும். அதிக கடன் பயன்பாட்டு விகிதத்தால்...உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமடைகிறது. அதனால்தான் நீங்கள் கார்டை பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை செயலில் வைத்திருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டை எப்படி சரியாக உபயோகிப்பது?
1. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிட வேண்டும்.. தவணைமுறையைத் தேர்வு செய்ய வேண்டாம்.
2. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.
3. நிறைய கார்டுகளை வைத்திருக்க வேண்டம.. ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதுடன், ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகி குழம்பிவிடும்.. அதிகபட்சம் ஒரு ஆட்ஆன் (add-on) கார்ட் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.
4. கஸ்டமர் சர்வீஸுக்கு ஒரு போன் கால் செய்வதன் மூலம், உங்களது லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளாம். உங்கள் மாத வருமானத்தில் 50%-க்கு அதிகமாக லிமிட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
5. முடிந்தஅளவுக்கு, பழைய கிரெடிட் கார்டுகளை மாற்றாமல் வைத்துக்கொள்வது ஒரு நீண்ட கடன் வரலாற்றை தெளிவாகக் காட்ட உதவும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications