ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு.. தமிழக அரசு சூப்பர் வசதி.. ரேசன் கார்டு தொலைந்துவிட்டதா? இனிமேல் ஈஸி
சென்னை: மிக முக்கியமான ஆவணமான ரேஷன் கார்டுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒருவேளை ரேஷன் அட்டைகள் தொலைந்து போனால் என்ன செய்வது தெரியுமா?
தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம், அட்டைதாரர்கள் அனைவருக்குமே குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள்.

அதிரடிகள்: இதைத்தவிர, பொங்கல் தொகுப்பு பரிசு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன..
ரேஷன் கார்டுகளை முகவரி சான்றாக நாம் பயன்படுத்தலாம்... அதேபோல, வங்கி தொடர்பான வேலை அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்பினாலும், ரேஷன் கார்டுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த அளவுக்கு ரேஷன் கார்டுகளின் முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டுகளை நாம் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
வெப்சைட்: ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால், நீங்கள் அரசு அலுவலகத்துக்கு நேரிலேயே சென்று விண்ணப்பித்து பெறும் நிலை இருந்தது. ஆனால், இப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்காகவே, ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும்படியான வசதியை உணவுத்துறை ஏற்படுத்தி தந்துள்ளது.. ரேஷன் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "பயனாளர் நுழைவு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரை பதிவிட வேண்டும் .
- பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி-யை பதிவிட வேண்டும்.
- ரேஷன் கார்டு டவுன்லோடு செய்ய, " ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து, Save என்ற ஆப்ஷனை தந்தால் போதும். PDF வடிவத்திலேயே உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
ஆஃப்லைன் முறையிலும் ரேஷன் கார்டுகளை பெற வேண்டுமானால், மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.
குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ரேஷன் கார்டு எண், குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள சான்றிதழ்கள் போன்ற அனைத்து ஆவணங்களையும் கையோடு கொண்டு செல்ல வேண்டும்.
ரசீதுகள்: பிறகு, அங்கிருக்கும் நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, அத்துடன் அபராத கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைக்க வேண்டும். மேலும், கையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தாலே போதும். மீண்டும் ரேஷன் கார்டுகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications