Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் நகைகள்..வெள்ளிக்கிழமை இதை மட்டும் பண்ணாதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளிக்கிழமை தானம் தரலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சில பொருட்களை தானம் தரக்கூடாது என்பார்கள்.. ஏன் தெரியுமா? ஆன்மீகம் சொல்லும் காரணம் என்ன?

இந்துசமய முறைப்படி, இறைவனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது.. எனவே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும், தெய்வீகம் நிறைந்த புனித நாளாகவே கருதப்பட்டு வருகிறது.. அதனால்தான் வெள்ளிக்கிழமைகளில் எல்லா விதமான கடவுள்களையும் வணங்க சொல்கிறார்கள்.. இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்குமாம்.

Do you know what are the things not to donate on Friday and what Should we donate on Friday

இந்த புனித வெள்ளிக்கிழமையை கணக்கில் வைத்தே சில பொருட்களை தானமாக தர சொல்கிறார்கள்.. எந்தெந்த பொருட்களை தானமாக தரலாம் தெரியுமா?

பண விவகாரம்: முதலில் பண விவகாரத்தில் சரியாக இருக்க வேண்டுமாம்.. வெள்ளிக்கிழமையன்று யாருக்கும் கடன் தரவே கூடாது.. அப்படி கடன் தருவது, நிறைய சிக்கலை இரு தரப்பிலும் உண்டுபண்ணிவிடுமாம். எனவே, கடன் வாங்குபவருக்கும், கடன் பெறுபவருக்கும் நிம்மதியே போய்விடும் என்பதால், கடன் தரக்கூடாது என்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு நிறைந்த சர்க்கரை உட்பட எந்தவொரு வெள்ளை நிறத்திலுள்ள பொருட்களையும் தானமாக தரக்கூடாதாம்.. இதில் வெள்ளை நிறத்திலான அரிசியை சேர்த்து கொள்ளலாம். அரிசியையும் தானம் செய்யக்கூடாது.. இதில், தயிர், உப்பு, இட்லி, தோசை மாவு, போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.

ஒட்டடை: வெள்ளிக்கிழமையில் வீட்டிலுள்ள ஒட்டடை அடிக்க வேண்டாம் என்பார்கள்.. பாத்ரூமையும் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாதாம்.. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது.. ஆனால், வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்யலாம்.. வெள்ளிக்கிழமைகளில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது, அழுக்குகள் சேர்ந்தால் கடன் தொல்லை வந்துவிடுமாம்.

வெள்ளிக்கிழமைகளில் தங்க நகைகளை கழட்டக்கூடாது, அந்த நகைகளை சுத்தம் செய்யவும்கூடாது, அதை பிறருக்கு தரவும் கூடாது.. வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவோ, ஷேவிங், முடிவெட்டவோ கூடாது.. அதேபோல நகம வெட்டவும் கூடாது..

தானங்கள் என்னென்ன: அப்படியானால் வெள்ளிக்கிழமைகளில் தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன தெரியுமா? உலோக தானங்கள் நிறைய செய்ய வேண்டுமாம்.. சர்க்கரை பொங்கல் தானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யலாம் செய்தால் நல்லது என்கிறார்கள்..

வெள்ளிக்கிழமை என்றில்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம் தானம் செய்யலாம். திங்கட்கிழமைகளில் நெய், செவ்வாய்க்கிழமைகளில் மரக்கன்று தானம் செய்யலாம். அதேபோல புதன்கிழமை, கல்வி உபகரணங்கள், வியாழக்கிழமைகளில் வஸ்திரம் போன்றவற்றையும், சனிக்கிழமை எண்ணெய்யை தானமாக அளிக்கலாம். இதன்மூலம், தடைகள் அகலும் என்று அறிவுறுத்துகிறார்கள்.. ஆனால், ஏழைகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அன்ன தானம் செய்யலாம் என்பது மிக முக்கியமானது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+